மகனின் கல்லறையில் QR குறியீடு!
கேரள மாநிலத்தில் மகன் கல்லறையில் க்யூ.ஆர் கோடு வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் – மனைவி லீனா தம்பதியின் மகன் ஐவின் பிரான்சிஸ் மருத்துவம் படித்து வந்துள்ளார். இந்நிலையில், பேட்மின்டன் விளையாடிய போது எதிர்பாராதவிதமாக ஐவின் பிரான்சிஸ் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்த ஐவின் பிரான்சிஸ் கல்லறையில், ஐவின் பிரான்சிஸ் குறித்த முழு விபரங்கள் அடங்கிய இணையதளத்தை உருவாக்கி இதற்கான க்யூ.ஆர்., கோடை அவரது கல்லறையில் பொறித்துள்ளனர்.