மகனை கொலை செய்து தாய் தந்தை தூக்கிலிட்டு தற்கொலை ..திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கொடூரம் ..
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மகனின் உடல்நல குறைபாட்டை குணப்படுத்த முடியாததால் மகனை கொன்றுவிட்டு தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகேயுள்ள கோவில்பதாகை பகுதியை சேர்ந்த தம்பதி முகமது சலீம், சோபியா இவர்களின் மகன் பிறவியில் இருந்து வாய் பேச முடியாமலும் காது கேட்காமலும் இருந்து உள்ளார்.
இதனை குணப்படுத்த முடியவில்லை எனக் கூறி தாய் தந்தை இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், முகமது சலீம் அவரது மகனை பாலித்தீன் கவர் மூலம் முகத்தை மூடி கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து அவரும், அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.