மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்… உருகிய இயக்குநர் விக்னேஷ் சிவன்!

September 13, 2022 at 12:43 pm
pc

நீயா நானா நிகழ்ச்சியில் மனைவியால் மட்டம் தட்டப்பட்ட அப்பாவின் வீடியோ க்ளிப்பிங்கை ஷேர் செய்து உருகியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 

மகளுக்காக

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற சீனி ராஜா என்பவர், தான் அதிகம் படிக்கவில்லை. தனது மகளை நன்றாக படிக்க வைக்க ஆசைப்படுவதாக கூறினார்.

அவமானப்படுத்திய மனைவி

ஆனால் சீனி ராஜாவின் மனைவி அவருக்கு ஒன்றும் தெரியாது, சோம்பேறித்தனமாக இருப்பார் என அவரை அவமானப்படுத்திக் கொண்டே இருந்தார். சீனி ராஜாவின் மனநிலையை புரிந்து கொண்ட கோபி நாத், அவரது மகள் கையாலேயே அவருக்கு பரிசு வழங்கினார்.

அப்பா தோற்கவில்லை

மேலும் ஆனந்தமாய் இருக்க அறிவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என அந்த பெண்ணிற்கும் அறிவுரை கூறினார். அவரது மகளிடம் இவர்தான் சூப்பர் டாடி என்றும் பாராட்டி பேசினார். மகளும் அப்பாவின் மனதை புரிந்து கொண்டு தன் அப்பா தோற்கவில்லை என்று அவருக்கு ஆதரவாக பேசினார்.

வைரல் வீடியோ

இந்த வீடியோக்கள் கடந்த 2 நாட்களாக வைரலாகி வருகிறது. பிரபலங்கள் பலரும் இதனை தங்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிலர் சீனி ராஜாவுக்கு ஆதரவாகவும் சிலர் அவரது மனைவிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

விக்கி உருக்கம்

அந்த வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று.. என குறிப்பிட்டு ஹார்ட்டின்களை பறக்கவிட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website