மக்களே இதையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிடாதிங்க.

பொதுவாக இன்றைய காலத்தில் பெரும்பாலோனர் குடல்புண்ணால் அவதிப்பட்டு வருகின்றார்கள். இரைப்பையில் அமிலம் அதிக அளவில் சுரக்கும் பொழுதும், எச்பைலோரஸ் என்ற கிருமிகளின் தாக்குதல் ஏற்படும் பொழுதும் குடல்புண் உண்டாகின்றது. அதிக உறைப்பு வகைகளை உணவில் சேர்ப்பது, நேரம் தவறி உணவு அருந்துதல், மது அருந்துதல், புகை பிடிப்பது, மிளகாய் அதிக அளவில் சேர்த்து எண்ணெயில் சமைத்த மாமிசம் உண்ணுதல் போன்ற பல காரணங்களால் இது ஏற்படுகின்றது.
இதனை தவிர்க்க வேண்டுமாயின் சில நாம் உண்ணும் சில உணவுகளை தவிர்ப்பது நல்லதாகும். அந்தவகையில் தற்போது குடல்புண்ணை ஏற்படும் அந்த உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
இலவங்கப் பட்டை
இலவங்கப்பட்டையை நாம் வெறும் வயிற்றில் அதிகமாக உட்கொள்ளும் போது, அது நமக்கு சின்னமல்டிஹைட் என்ற பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. மேலும் இது நமது அடிவயிற்றில் வலியையும் ஏற்படுத்தும் அபாயம் அதிகம்.
கருப்பு மிளகு
கருப்பு மிளகு அதிகமாக உட்கொள்ளப்படும் பொழுது நாம் ஏதேனும் மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் அதன் விளைவினை இது பாதிக்கும் . இது குடலின் உயிரியல் பண்பை மாற்றுவதால், இதன்காரணமாக சில மருந்துகளில் உள்ள பயன்கள் நமக்கு கிடைக்காமல் போகிறது. மேலும் இது வேறு சில மருந்துகளுடன் வினை புரியும்போது ஒவ்வாமைக்கு வழிவகுக்கிறது.
மிளகுத்தூள்
காலையில் வெறும் வயிற்றில் மிளகுத்தூள் சாப்பிடும்போது வயிற்று காய்ச்சல், வயிற்று எரிச்சல், மற்றும் எரியும் உணர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே காலை உணவுகளில் நீங்கள் இந்த மிளகுத்தூள் சேர்ப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
வெந்தயம்
சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை உட்கொள்ளக்கூடாது. இந்த வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வதன் காரணமாக ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதுமட்டுமின்றி உங்கள் அடிவயிற்றில் அதிக வலி மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
கேரம் விதைகள்
கேரம் விதைகளை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது உடலில் வெப்பநிலையை அதிகரித்து நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். குறிப்பாக கோடைக்காலங்களில் உட்கொள்ளப்படும் பொழுது, சில நேரங்களில் இது அஜீரணத்திற்கு வழிவகுக்கிறது.