மக்களே உஷார்!!ஏ.சி.யில் இருந்து பரவும் புதிய நோய்.! 4 பேர் பலி..
அர்ஜென்டினா நாட்டில் லெஜியோனேயர்ஸ் நோயால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு கிளினிக்கில் நான்கு பேர் லெஜியோனேயர்ஸ் நோயால் இறந்தனர்.
லெஜியோனேயர்ஸ் நோய் என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தீவிரமான நிமோனியா (நுரையீரல் தொற்று) ஆகும். இந்த நோய் முதன்முதலில் 1976 ஆம் ஆண்டு அமெரிக்க நகரமான பிலடெல்பியாவில் நடந்த அமெரிக்க படைவீரர்(லெஜியோன்ஸ்) குழுவின் கூட்டத்தில் தோன்றியது.
லெஜியோனெல்லா பாக்டீரியா கொண்ட சிறிய நீர்த்துளிகளை சுவாசிக்கும்போது அல்லது லெஜியோனெல்லா கொண்ட தண்ணீரை தற்செயலாக விழுங்கும்போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டு மக்கள் நோய்வாய்ப்படலாம். இந்த பாக்டீரியா அசுத்தமான நீர் அல்லது அசுத்தமான ஏர் கண்டிஷனிங் அமைப்புகளில் இருந்து உருவாகி பரவும்.