மக்களே உஷார்!! ஆன்லைனில்1000ரூபாய்க்கு இனிப்பு ஆர்டர் செய்த பெண்!! ரூ.2.4 லட்சம் மோசடி…

October 26, 2022 at 10:42 am
pc

மும்பை அந்தேரியில் வசிப்பவர் பூஜா ஷா (49). இவர் கடந்த 23ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ஆன்லைனில் புட் டெலிவரி ஆப்பில் இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் பண பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளது. இதனால், பூஜா சம்பந்தப்பட்ட இனிப்பு கடையின் எண்ணைக் கண்டுபிடித்து போன் செய்து தொடர்புக் கொண்டார். பண பரிவர்த்தனை ஆகவில்லை என கடைக்காரரிடம் கூரியுள்ளார். பின்னர், பூஜாவிடம் இருந்து அந்த நபர் கிரெடிட் கார்டு மற்றும் ஓடிபி விவரங்களை பெற்றுள்ளார். பூஜா தனது விவரங்களை கொடுத்த அடுத்த நொடியில், அவரது கணக்கில் இருந்து ரூ.2.4 லட்சம் எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த பூஜா ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், ரூ.2,27,205 மாற்றப்படுவதை தடுத்து பணத்தை மீட்டனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website