மணிரத்னம் அவ்ளோ திட்டியும் எச்சரித்தும் கேட்காத ஐஸ்வர்யா ராய், த்ரிஷா..!!வைரலாகும் புகைப்படம்

September 26, 2022 at 1:26 pm
pc

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, பிரபு, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் படம் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாவலை படிக்காதவர்களோ புத்தகத்தை வாங்கி வைத்து படம் ரிலீஸாவதற்குள் படிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையை மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். அப்படியொரு விளம்பர நிகழ்ச்சியில் கோவில் பற்றி விக்ரம் பேசியது ரசிகர்களை கவர்ந்துவிட்டது.

குந்தவைக்கும், நந்தினிக்கும் இடையே ஆகாது. அப்படி இருக்கும்போது படப்பிடிப்பின்போது குந்தவை த்ரிஷாவும், நந்தினி ஐஸ்வர்யா ராயும் சிரித்துப் பேசியிருக்கிறார்கள். இதை பார்த்த மணிரத்னமோ கதாபாத்திரமாகவே இருக்க வேண்டும், நீங்கள் இருவரும் சிரித்துப் பேசவே கூடாது என்று திட்டியிருக்கிறார்.

அதையும் தாண்டி ஐஸ்வர்யா ராயும், த்ரிஷாவும் செல்ஃபி எடுத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் அதுவும் குந்தவை, நந்தினி கெட்டப்பில் அவர்கள் எடுத்த செல்ஃபி வைரலாகிவிட்டது. சோழர் காலத்தில் ஸ்மார்ட் போன் இருந்ததா என்று கேட்டு மீம்ஸ் வேறு போட்டிருக்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website