மனைவியுடன் தகாத உறவில் இருந்த நண்பனை படுக்கையிலே வெட்டி கொன்ற நண்பன்.
புதுசேரி ஏனாம் பகுதியில் மனைவியுடன் தகாத உறவில் நண்பரை கத்தியால் குத்திக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கோதாவரி ஆற்றில் ஆந்திர மாநிலத்தின் ஏனாம் பகுதி. இங்கு குருசம்பேட்டை மாவட்டம் கொல்லட்டி ராம்பாபு (35), சங்கடி புஜ்ஜி (35) ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து மீன்களை மொத்தமாக வாங்கி சில்லறை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர்.
இதில் புஜ்ஜி அடிக்கடி ராம்பாபு வீட்டிற்கு சென்று ராம்பாபுவின் மனைவி அர்த்தனியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இருவரும் தனிமையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ராம்பாபுவுக்கு தெரியவந்ததும், கடந்த 11ம் தேதி, பூஜி தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டபோது, ராம்பாபு வந்து பூஜியின் கழுத்து மற்றும் உடலில் கத்தியால் குத்தியதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஏனாம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புஜ்ஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஏனாம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையை செய்த ராம்பாபுவை, ஐதராபாத் புறவழிச்சாலையில் போலீசார் சுற்றி வளைத்து, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மனைவியுடன் தகாத உறவில் நண்பனின் கொலையால் ஏனாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.