மன்னிப்பு கேளுங்கள்… இல்லாவிட்டால் மானநஷ்டஈடு 10 கோடி ரூபாய் வழக்கு தொடருவேன்.. நடிகர் தனுஷ் எச்சரிக்கை!
மன்னிப்பு கேட்குமாறு மதுரை தம்பதிக்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுபியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னிப்பு கேட்குமாறு மதுரை தம்பதிக்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தம்பதி
மதுரை மேலூர் பகுதியை சேர்ந்தவர்கள் கதிரேசன்- மீனாட்சி தம்பதி. நடிகர் தனுஷ் தங்களின் மகன் என மதரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் தங்களை பிரிந்து சென்ற தனுஷ் தங்களுக்கு மாதம் தோறும் 60 ஆயிரம் ரூபாய் பணம் வழங்க உத்தரவிட வேண்டும் தங்களின் மனுவில் கோரியிருந்தனர்.
தனுஷுக்கு நோட்டீஸ்
இதனிடையே தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் போலியானது என்று கதிரேசன் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹைகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார் கதிரேன். இதனை விசாரித்த ஹைகோர்ட் நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதனிடையே நடிகர் தனுஷுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கும் கதிரேசன் தம்பதியினர் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதில் கஸ்தூரிராஜா தங்களைக் கொலை செய்ய முயற்சித்ததாகவும், அதற்காக நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்றதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.
மன்னிப்பு கேளுங்கள்
இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா தம்பதியினர் கதிரேசன் தம்பதிக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் தங்களின் மிது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் தெரிவித்துள்ளனர்.