மயக்க மருந்து கொடுத்து நடிகை பலாத்காரம்… போலீஸுக்கு பயந்து தலைமறைவான நடிகர்!

May 2, 2022 at 2:53 pm
pc

நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கிய பிரபல நடிகர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகைக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் பாபு

மலையாள சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் பாபு. இவர் தயாரிப்பில் வெளியான படத்தில் நடித்த நடிகை ஒருவர் அண்மையில் இவர் மீது சமூக வலைதள பக்கத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார்.

பாலியல் துன்புறுத்தல்

அதாவது தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் பழகிய விஜய் பாபு தனக்கு போதை மருந்து கொடுத்து பல முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார். மேலும் தன்னை நிர்வாண வீடியோ எடுத்து வைத்து மிரட்டியும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறியிருந்தார்.

சட்ட மீறல்

அவரது புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஃபேஸ்புக் லைவ்வில் பேசிய விஜய் பாபு, அந்த நடிகையால் தான்தான் பாதிக்கப்பட்டதாகவும் அவரை 5 ஆண்டுகளாக தெரியும் என்றும் கூறியிருந்தார். மேலும் சட்டத்தை மீறி பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை பல முறை கூறினார்.

தலைமறைவு

இதனால் நடிகர் விஜய் பாபு மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன. இதையடுத்து நடிகர் விஜய் பாபு எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் பாபு கைதுக்கு பயந்து தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சிக்கும் நடிகர்கள்

ஏற்கனவே நடிகர் திலீப் மீது நடிகை கடத்தல், பாலியல் துன்புறுத்தல், விசாரணை அதிகாரி கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்நிலையில் அனீஷ், விஜய் பாபு என அடுத்தடுத்து நடிகர்கள் பாலியல் புகாரில் சிக்கி வருவது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website