மருத்துவர் அலட்சியம் -வலியால் கதறிய பெண், கருப்பையில் இருந்த பஞ்சு..!
நெய்யாட்டின்கராவைச் சேர்ந்த ஜீத்து (24), ஜூலை 26, 2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த எட்டு மாதங்களுக்குப் பிறகும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில், அவரது கருப்பையில் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட பஞ்சு இருப்பது தெரியவந்தது. பின்னர் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட பஞ்சு அகற்றப்பட்டு 20 நாட்கள் கழித்த பிறகு, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவர் சுஜாதா அகஸ்டின் அலட்சியத்தால் இச்சம்பவம் நேர்ந்ததால் ஜீத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.