மழைக்காலத்தில் உங்கள் முகத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா … இதை மட்டும் செய்து வந்தாலே போதும் உங்கள் அழகு கூடுமே தவிர குறையாது!!

November 21, 2022 at 6:58 am
pc

மழைக்காலத்தில் சரும பிரச்சனைகள் சற்று அதிகமாகவே இருக்கும். மற்ற நேரங்களில் சுற்றுச்சூழல், உணவுகளால் ஏற்படும் என்றால், மழை நேரங்களில் சுற்றி இருக்கும் ஈரப்பதத்திற்கு சரும பாதிப்புகள் அதிகம் ஏற்படும். இந்த நேரங்களில் தான் நம் இன்னும் கவனமாக நம்முடைய சருமத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அந்த வகையில் இந்த மழை நேரத்தில் முகத்தை பாதுகாக்க ஒரு சுலபமான குறிப்பு தான் இந்த பதிவில் நம் போது பார்க்க போகிறோம்.


அப்படியானால் இந்த குறிப்பை மழைய நாட்களில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா? மற்ற நாட்களில் பயன்படுத்தக் கூடாதா, என்றால் அப்படியெல்லாம் ஏதும் இல்லை . மழை நாட்களில் சருமத்தில் ஏற்படும் வறட்சியையும் சரி செய்யும், அதே நேரத்தில் வெயில் காலத்தில் வெயிலால் தோன்றும் முகக்கருமையும் இது நீக்கும். இரண்டுக்குமே இது பொதுவான ஒரு குறிப்பு தான். இந்த பேக் தினமும் போடுவதால் சரும பாதிப்பை சரி செய்வதுடன் முகப்பரு, சிலருக்கு சின்ன சின்ன புள்ளிகள் போல தோன்றி நாளடைவில் அது முகத்தில் சிகப்பு சிகப்பாக மாறி தழும்பு போல ஆகிவிடும். இதையும் இந்த பேக் மூலம் சரி செய்யலாம்.


இதற்கு அதிக செலவும் செய்ய வேண்டியதில்லை நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை வைத்தே இந்த கிரீமை தயார் செய்து விடலாம். அதற்கு தேவையான பொருட்கள் வாழைப்பழம் மஞ்சள் தூள், தயிர்,தேன்.


ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு வாழைப்பழத்தில் கால் பங்கு மட்டும் எடுத்து நன்றாக நுரைத்து வரும் அளவிற்கு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பின்ச் மஞ்சள் தூள், மஞ்சள் தூள் அளவு இதில் மிகவும் முக்கியம். அதிகம் சேர்த்து விடக் கூடாது. கஸ்தூரி மஞ்சள் முகத்திற்கு பூசும் மஞ்சள் எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு ஒரு ஸ்பூன் தயிர், இதை மூன்றும் ஒன்றாக கலந்த பிறகு ஒரு அரை ஸ்பூன் அளவிற்கு தேனையும் சேர்த்து நன்றாக குறைத்து உங்கள் முகத்தில் தடவி ஒரு பத்து நிமிடம் கழித்து அலம்பி விடுங்கள் இதை தேய்த்து மசாஜ் எல்லாம் செய்ய தேவையில்லை.


அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் போல உங்கள் முகத்திற்கு எந்த கிரீம் ஜெல் சோப்பு எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இதை தினமும் ஒரு ஐந்து நிமிடம் உங்கள் முகத்தில் தடவி வைத்த பிறகு முகத்தை கழுவி விட்டாலே போதும்.
இது ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின் என்று எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருமே உபயோகிக்கலாம் ஆண்களும் இதை பயன்படுத்தலாம். அவர்கள் பயன்படுத்தும் போது மஞ்சளை மட்டும் தவிர்த்து விட்டால் போதும்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website