மாம்பழம் கேட்டு அடம்பிடித்ததால் 5 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற சித்தப்பா!

July 25, 2022 at 11:39 am
pc

மாம்பழம் கேட்டு அழுது தொல்லை கொடுத்ததால் 5 வயது சிறுமியை சித்தப்பா அடித்து கொலை செய்துள்ளார் பகிர் சம்பவம் நடந்துள்ளது. மேலும் அக்குழந்தையின் கழுத்தை அறுத்து கொடூரத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். உலகில் சில கொடூர மனம் படைத்தவர்கள் குழந்தை என்றும் பாராமல் குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது, சில நேரங்களில் அடித்துக் கொலை செய்வது போன்ற கொடூரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் மாம்பழம் கேட்டு தொல்லை கொடுத்த ஐந்து வயது அண்ணன் மகளை அவளின் சித்தப்பா கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி அடுத்துள்ள கெடா குருதான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி, அவரின் மகள் கைரு நிஷா (5) பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விட்டதால் இவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார், சிறுமியுடன் அவரது சித்தப்பா உமர் தீன் இருந்துள்ளார்.

இந்நிலையில் தனது சித்தப்பா மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், அப்போது 5 வயது சிறுமி கைரு நிஷா, தனக்கும் சாப்பிட மாம்பழம் வேண்டும் என கேட்டு அடம் பிடித்துள்ளார். ஆனால் அந்த நபர் சிறுமிக்கு மாம்பழம் கொடுக்கவில்லை.

ஆனால் சிறுமி தனக்கும் கொஞ்சம் மாம்பழம் கொடுங்கள் என அழுததாக தெரிகிறது. இதில் பொறுமை இழந்த அந்த நபர், சிறுமியில் தொடர் வறுபுறுத்தலால் கோபத்தின் உச்சத்திற்கே சென்றார்.

ஆத்திரத்தில் வீட்டில் இருந்த தடியால் சிறுமியின் தலையில் ஓங்கி அடித்தார். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை, அவர் சமையல் அறையில் இருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை கரகரவென அறுத்த நிலைியல் வீடு முழுவதும் ரத்தம் கொட்டியுள்ளது.

பின்னர் அதை மறைக்க சிறுமியின் சடலத்தை கோணிப்பையில் கட்டிய அவர், அருகிலிருந்த வனப்பகுதியில் வீசிவிட்டு தனக்கு எதுவும் தெரியாதது போன்று இருந்துள்ளார்.

பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் மகளை தேடினர் ஆனால் எங்கு தேடியும் அவளை காணவில்லை இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

சிறுமியின் உறவினர்கள் அந்த பகுதி முழுக்க தேடுதலில் ஈடுபட்ட நிலையில், சிறுமியின் சித்தப்பாவும் தேடுவது போன்று நடித்துள்ளார்.

இந்நிலையில் உமர் தீன் நடவடிக்கையில் போலிசாருக்கு சந்தேகம் ஏற்படவே, இதனை அறிந்து கொண்ட அந்த நபர் தலைமறைவாகினார். சிறுமியை கொன்றது உமர் தீன் தான் என்பதை உறுதி செய்த போலீசார் வனப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர்.

அவர் சிறுமியை கொல்ல பயன்படுத்திய கத்தி மற்றும் இரும்பு கம்பி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபர் கொடுத்த தகவலின்படி சிறுமியின் சடலத்தை பொலிஸார் கைப்பற்றிய நிலையில், சிறுமியின் சித்தப்பாவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website