மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்!

September 13, 2024 at 9:55 am
pc

பாஜகவின் செயற்குழு உறுப்பினராக இருந்தவரும், முன்னாள் எம்.பி.யுமான மைத்ரேயன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மைத்ரேயன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, பாஜகவில் சேர்ந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் அக்கட்சியில் இருந்து விலகினார். 

அதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியைச் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று (12.9.2024) நேரில் சந்தித்தார்.

அப்போது அவர் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார். அதனை எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்து மைத்ரேயனை அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website