முகம் தங்கம் போல ஜொலிக்க இந்த பொடிய போட்டு முகம் கழுவுங்க… அப்பறம் பாருங்க மாயாஜாலத்தை ….!!

July 3, 2022 at 2:04 pm
pc

முகத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள நாமும் பல விதமான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தியிருப்போம். சிலருக்கு ஒத்துப்போகும், பலருக்கு ஒத்துப்போகாது. இதனால், முகத்தில் பருக்கள் அதிகமாகும். இதற்கு காரணம் அவரவர் தோலின் வகை. அதாவது டிரை ஸ்கின், ஆயிலி ஸ்கின், நார்மல் ஸ்கின் என சரும வேறுபாடு இருக்கும். ஆனால், எல்லா ஸ்கின் டைப்பிற்கு ஏற்றவாறு ஒரு பொருள் இருக்கிறது. இந்த பொடியை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். இனி கெமிக்கல் அழகு சாதனப் பொருட்கள் பை பை. வாங்க அந்த பொடியை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

ஹெர்பல் பவுடர்:

இதற்கு சந்தனப் பொடி, ஓட்ஸ் பொடி, ஆரஞ்சு தோல் பொடி என்று மூன்று பொருட்கள் தேவை.

சந்தனப் பொடி இயற்கை அங்காடியில் கிடைக்கும். ஆரஞ்சு தோல் பொடி நீங்கள் தேவைப்பட்டால் அங்கே வாங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் வீட்டிலேயே தயார் செய்யலாம்.

ஆரஞ்சு பழத்தின் தோல்களை உறித்து, நிழலில் 5-6 நாட்கள் காயவைத்து கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியில் போட்டி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஆரஞ்சு பொடி ரெடி.

இதேபோல், ஓட்ஸ் பொடியையும் வீட்டிலேயே செய்யலாம். அதற்கு ஓட்ஸ் வாங்கி மிக்ஸியில் அரைத்தால் ஓட்ஸ் பொடி ரெடி. மூன்று பொடியும் இருக்கா? அப்போ எப்படி பயன்படுத்துவது? வாங்க பார்க்கலாம்.

இந்த மூன்று பொடியையும் சம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் டிரை ஸ்கின் உள்ளவர்கள் உங்களுடைய முகத்தை கழுவ எவ்வளவு தேவையோ அவ்வளவு பொடியை எடுத்து தயிர் அல்லது பால் கலந்து முகத்தில் பேஸ் பேக் போட்டுக் கொள்ளுங்கள்.

அதுவே, ஆயில் ஸ்கினாக இருந்தால் அரிசி வடித்த தண்ணீர் அல்லது ரோஸ்வாட்டரில் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பேஸ் பேக் போட்டு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவிடுங்க.

இதை தினமும் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே கண்கூட பார்க்க முடியும். இதை கழுத்து கருமையை போக்கவும் பயன்படுத்தலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website