முதல்வர் வீட்டு மருமகளான ஜெனிலியா-அழகான காதல் …

August 5, 2022 at 4:25 pm
pc

பாலிவுட் சென்ற இடத்தில் அப்போதைய மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகனான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஜெனிலியா. அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் தம்பதிகளில் ஜெனிலியா-ரித்தேஷ் தம்பதியும் ஒன்று. ஜெனிலியாவின் பிறந்தநாளான இன்று அவரின் காதல் வாழ்க்கை பற்றி பார்ப்போம்.

துஜே மேரி கசம் படம் மூலம் தான் ஜெனிலியாவும், ரித்தேஷும் பாலிவுட்டில் அறிமுகமானார்கள். பணக்கார வீட்டுப் பையன், சேட்டைக்காரனாகத் தான் இருப்பான் என்று செட்டில் முதல் இரண்டு நாட்கள் ரித்தேஷை கண்டுகொள்ளவே இல்லையாம். 

இது குறித்து ஜெனிலியா கூறியதாவது,

பணக்கார பையன், அவனுடன் பேசக்கூடாது என்று நினைத்தேன். நான் ஏன் பேச மாட்டேன் என்கிறேன் என்று அவர் வியந்திருக்கிறார். முதல்வரின் மகன் என்பதால் அவருடன் பேசுகிறேன் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது என நினைத்தேன்.

இருப்பினும் நாங்கள் பேசத் துவங்கினோம். அதன் பிறகு அது நிற்கவே இல்லை என்றார்.

ரித்தேஷ் கூறியதாவது,

ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஷாட்டுக்காக காத்திருந்தேன். லைட்ஸை மாற்றிக் கொண்டிருந்தார்கள். உங்களின் பாதுகாவலர்கள் எங்கே என்று ஜெனிலியா என்னிடம் கேட்டார். புதரில் மறைந்திருக்கிறார்களா என்றார்.

எதுக்கு பாதுகாவலர்கள்?. எனக்கு யாரும் தேவை இல்லை என்றேன். அப்பொழுது தான் நான் பாதுகாவலர்கள் இல்லாமல் சுற்றும் சாதாரண பையன் என்பதை அவர் புரிந்து கொண்டார் என்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website