மோடி அணியும் உடை, பெட்ரோல் மற்றும் பறக்கும் விமானம் எல்லாம் என் காசு! நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விளாசல்

April 14, 2024 at 4:00 pm
pc

பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமாக விமர்சித்துள்ளார்.

தேர்தல் பரப்புரை நாடெங்கும் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் மோடியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். 

மோடியை மன்னர் என்று பெயரிட்டு தனது நேர்காணலை தொடங்கிய பிரகாஷ்ராஜ், அவர் அணியும் உடைகள், புஷ்பக விமானத்தில் செல்கிறார், ஒரு மன்னர் போல் நடந்து கொள்ளும் அவரது ஆட்சி பிடிக்கவில்லை என்பதால் விமர்சிப்பதாக கூறினார். 

மேலும் அவர் கூறுகையில், ”கருப்புப்பணத்தை எங்கே ஒழித்திருக்கிறார் அவர்? ஓட்டுக்கு அவர் காசு கொடுப்பதில்லையா? மன்னர் (மோடி) அணியும் உடைகளுக்கு காசு எங்கிருந்து வருகிறது? ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் அவருடைய SPG பாதுகாப்புக்கு..,நான் கொடுத்து காசுல ஒரு புஷ்பக விமானத்தை வாங்கிக் கொண்டு, தேர்தல் பரப்புரைன்னு சுற்றிக் கொண்டிருக்கிறார் அவர்.

அதெல்லாம் யாரு காசு? மன்னரின் முகத்திற்கு நேராக கூற வேண்டும் நீங்கள் போடும் பெட்ரோல், பாதுகாப்பு, உடைகள் எல்லாம் என்னுடைய காசு யா.

அதற்காகவா நான் கொடுத்தேன்? 3,000 கோடிக்கு ஒரு சிலை வைத்தார், ஏன் சீனாவில் இருந்து வரவழைத்தார் அதற்கு? கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டதற்கு கேட்டால் 500 கோடி தரவில்லை. 

எது முக்கியம் இந்த நாட்டுக்கு? வல்லபாய் படேல் சிலையின் வருமானம் என்ன? நம்ம மன்னர் ஒரு Event மேனேஜர். 400 இடங்களுக்கு மேல் வருவேன் என்று ஆணவமாக கூறுகிறார். ஏன் கொலைகாரன், கொள்ளைக்காரனை எல்லாம் உங்கள் கட்சியில் சேர்த்திருக்கிறீர்கள்” என பேசியுள்ளார்.    

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website