ரஜினி, விஜய் பட பிரபலம் திடீர் மரணம்: சோகத்தில் திரையுலகம்.!
ரஜினியின் தர்பார், விஜய்யின் சர்கார் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றியவர் சந்தானம். பிரபல கலை இயக்குனரான இவர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியவர் தான் சந்தானம். மேலும் தெய்வத்திருமகள், சர்கார், தர்பார் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய இவர் குறிப்பாக, ஏ.ஆர். முருகதாஸ் படங்களில் சமீப காலமாக அதிகம் பணியாற்றி வந்தார்.
இறுதியாக ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘1947’ என்ற படத்திலும் அவர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்தப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கலை இயக்குனர் T.சந்தானம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பலரும் T.சந்தானம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.