ராதிகாவுடன் பைக்கில் சென்று வாக்கு சேகரித்த சரத்குமார்!

April 14, 2024 at 3:27 pm
pc

வரும் மக்களவை தேர்தலுக்காக வேட்பாளர் ராதிகாவுடன் பைக்கில் சென்று வாக்கு சேகரிப்பில் சரத்குமார் ஈடுபட்டார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி வேட்பாளர் ராதிகா இருவரும், விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தனது மனைவி ராதிகாவை பைக்கில் பின்னால் அமர வைத்து சரத்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவர்கள் பல்வேறு தெருக்களுக்கு சென்று வாக்கு சேகரித்தனர்.

அப்போது, சரத்குமார் தலையில் ஹெல்மெட் போடாமல் பைக்கில் சென்றார். மேலும், நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் சென்றுள்ளனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website