ராமராஜன் – நளினி விவாகரத்துக்கு நான் காரணம்ன்னு சொன்னாங்க: வருத்தப்பட்ட விக்ரம் பட நடிகை.!


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நளினி. முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அருண் அருணா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 2000-ம் ஆண்டு நளினி ராமராஜன் தம்பதி தங்களது திருமண வாழ்வில் இருந்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் இவர்கள் விவாகரத்து வாங்கிய போது அதற்கு காரணம் நடிகை அபிதா தான் என வதந்திகள் பரவியதாம். இதை கண்டு மிகவும் வேதனைப்பட்டதாக அபிதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சேது படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த அபிதா தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். திருமணம் ஆனதும் சினிமாவை விட்டு விலகிய திருமதி செல்வம் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்தார். அர்ச்சனா ரோலில் நடித்து மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார். கணவர், குழந்தைகள் என செட்டில் ஆனவர் இப்போது மீண்டும் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் மாரி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அபிதா அளித்த பேட்டி ஒன்றில், அவர் பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருந்தார். அதிலும் குறிப்பாக ராமராஜன் நளினி தம்பதி விவாகரத்து வாங்கிய சமயத்தில் இவர் ராமராஜனுடன் இணைந்து படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தாராம். செட்டில் மிகவும் அமைதியாக சொல்லப்போனால் யாருடனும் பேச கூட மாட்டாராம்.
அப்படி இருக்கையில் நளினி – ராமராஜன் விவாகரத்துக்கு பின்னால் இருக்கும் காரணம் இவர் தான் என்று வதந்திகள் பரவியதாம். அதுமட்டுமில்லை சில பத்திரிக்கையில் செய்திகள் கூட வெளியாகியதாம். அதை பார்த்து மிகவும் மனமுடைந்து போனாராம் அபிதா. மிகுந்த வேதனையில் இதை பற்றியே பல மாதங்கள் நினைத்து கஷ்டப்பட்டேன் எனவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் அபிதா.