லட்சத்தில் ஒருவருக்கு தான் இந்த நோய் வரும் – கலா மாஸ்டர் கூறிய உண்மைத் தகவல்
தமிழ் சினிமாவில் 90களில் தனது அழகினாலும் நடிப்பினாலும் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மீனா.
இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருணம் செய்திருந்தார். 10 வருடங்களுக்கு மேலாக சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 28ம் தேதி வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மரணமடைந்தார். மேலும் அவரது மரணத்திற்கான காரணம் பற்றி பல வதந்திகளும் உலா வர தொடங்கிய நிலையில், மீனா அறிக்கை வெளியிட்டு, வதந்தி பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது கலா மாஸ்டர் அளித்திருக்கும் பேட்டியில் மீனா கணவர் மரணத்திற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.”பாம்பேவில் இருக்கும் புறா எச்சம் இருந்தால், சுவாசித்தாலே தவறு என சொல்வார்கள். பெங்களூரில் அது நிறைய இருக்கிறது. இப்படி லட்சத்தில் ஒருவருக்கு தான் infection ஏற்படும். அது சாகருக்கு வந்துவிட்டது” என கலா மாஸ்டர் தெரிவித்து இருக்கிறார்.