வங்கக்கடலில் உருவாகும் புயல்: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

November 29, 2023 at 8:22 pm
pc

வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், டிச 2, 3- ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபொழுது கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது..

”தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை(நவ 30) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

மேலும் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்.

புயலாக கரையை கடக்குமா? எங்கு கரையை கடக்கும்? என்பதை வரும் நாட்களில் கண்காணித்த பின்பே கூற முடியும் என்றார்.

மேலும் வங்கக்கடலில் டிச2 புயல் உருவாகக்கூடும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் டிச 2 மற்றும் டிச 3- ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என கூறினார்.

மேலும் வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும்.

வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 8% குறைவாகவே பெய்துள்ளது” என செய்தியாளர்களிடம் கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website