வாயுக் கோளாறு , மலச் சிக்கல் மற்றும் வாதம் சார்ந்த நோய்களை குணப்படுத்தும் வல்லமை மிக்க சூப்…!

June 7, 2022 at 7:49 am
pc
தேவையான பொருட்கள் :

முடக்கத்தான் கீரை – 2 கைப்பிடி
சீரகம் , மிளகு , கசகசா – (தலா) அரை ஸ்பூன்
பூண்டு. – 6 பல்
இஞ்சி. – ஒரு துண்டு
தேங்காய்த் துருவல். – 50 கிராம்
சோம்பு. – அரை ஸ்பூன்
தனியா பொடி. – 2 ஸ்பூன்
உப்பு. – தேவையான அளவு
சின்ன வெங்காயம். – ஒரு கைப்பிடி
பசு நெய். – 5 ஸ்பூன்

செய்முறை:

முதலில் முடக்கத்தான் கீரையை சுத்தப் படுத்தி இலையை ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சோம்பு , தேங்காய்த் துருவல் மற்றும் கசகசா ஆகியவற்றை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயத்தை அரிசி களைந்த நீரில் போட்டு அதில் சோம்பு , தேங்காய்த் துருவல் , கசகசா ஆகியவற்றைச் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு அதில் உப்பு , கொத்தமல்லி மற்றும் முடக்கத்தான் இலையைச் சேர்த்து நன்கு வேகவைத்து சூப்பாக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு அதில் இஞ்சி , பூண்டு , சீரகம் , மிளகு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி அதில் சிறிது நெய்யைச் சேர்த்து சூப்பில் கொட்டி கிளறி பருகவும்.

பயன்கள் :

இந்த கீரைச் சூப்பை வாரம் ஒரு முறையாவது சாப்பிட்டு வரவும்.இதனால் வயிறு சுத்தமாகி வாதம் சார்ந்த குறைபாடு நீங்கும்.மேலும் இந்தக் கீரை சூப்பை குடித்து வந்தால் மலச் சிக்கல் , படை , சொரி , சிரங்கு ,கரப்பான் போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கும் .

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website