விக்ரமனை பார்த்து பயப்படுகிறார் கமல்… வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்!

November 23, 2022 at 4:17 pm
pc

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை பார்த்து நடிகர் கமல்ஹாசன் பயப்படுவதாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்

பிக்பாஸ் சீசன் 6

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பெரும்பாலும் சின்னத்திரை பிரபலங்களே பங்கேற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியை சேர்ந்தவர்கள்தான் அதிகம். இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாமானியர்களில் இருந்து ஒருவராக தனலெட்சுமியும் அரசியல் பிரமுகராக விக்ரமனும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

விசிக பிரமுகர் விக்ரமன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன், பிக்பாஸ் வீட்டில் நிதானமானவராக தெரிகிறார். சக போட்டியாளர்களுக்கு மரியாதை கொடுத்து வரும் விக்ரம் நியாயத்தையும் பேசி வருகிறார். இதனால் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் விக்ரமனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் விக்ரமன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து சமூக வலைதளங்களிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கமல் பயப்படுகிறார்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை பார்த்து நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் பயப்படுவதாக கூறியுள்ளார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பிரபலங்கள் பலரும் தங்களின் யூட்யூப் பக்கத்தில் விமர்சனங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது, விக்ரமனை பார்த்து கமல் பயப்படுகிறார். எல்லா போட்டியாளர்களையும் எதிர்த்து கேள்வி கேட்கும் கமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரான விக்ரமனை மட்டும் எதுவும் கேட்காமல் தமாஷாக பேசி வருகிறார். விக்ரமன் ஏதாவது தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்டாமல் ஒதுக்கி வைத்து விடுகிறார் கமல். கமஹாசன் கடந்த சீசன்களை தொகுத்து வழங்கியது போல் இந்த சீசனில் இல்லை.

சண்டையை மூட்டி விடுகிறார்

விஜய் டிவியுடன் ஒட்டி ஒழுகி செல்கிறார். பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்க்கின் போது சண்டை போடுங்கள், ஆனால் டாஸ்க் முடிந்த பிறகு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார் கமல். பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளுக்குள் சண்டையை மூட்டி விடுகிறார். உள்ளே எவனும் நிம்மதியா இருக்கக்கூடாது, தூங்கக்கூடாது, ஒருவரை பற்றி ஒருவர் குறை சொல்ல வேண்டும் என்பதை போன்ற டாஸ்க்கைதான் கொடுக்கிறார்.

வில்லத்தனத்தை விதைக்கும் நிகழ்ச்சி

மக்கள் மனதிலும் வில்லத்தனத்தை விதைக்கிற நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். மேலும் சண்டை போடுபவர்களைதான் பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் 80 சதவீத பேரின் வெறுப்பை சம்பாத்தித்துள்ள அசீமைதான் வைத்திருக்கிறார்கள் என சாடியுள்ளார். மக்களும் சண்டை போடுபவர்களுக்குதான் வாக்கு அளிக்கிறார்கள் என்றும் அதிருப்தியை தெரிவித்துள்ளார் பயில்வான். மேலும் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கே சண்டை போடும் டாஸ்க்காகதான் உள்ளது என கமல்ஹாசன், பிக்பாஸ், போட்டியாளர்கள் என அனைவரையும் விளாசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website