வெச்சான்பாரு ஆப்பு – ரஷ்ய தங்க ஏற்றுமதியை தடை செய்த ஜி7 நாடுகள்!

June 27, 2022 at 8:13 am
pc

பிரித்தானியா உட்பட 4 ஜி7 நாடுகள் ரஷ்ய தங்க ஏற்றுமதியை தடை செய்வதாக அறிவித்துள்ளன. ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காக தொழிலதிபர்கள் தங்கத்தை வாங்குவதைத் தடுக்கும் புதிய முயற்சியில் பிரித்தானியா உட்பட நான்கு G7 சக்திகள் ரஷ்ய தங்க ஏற்றுமதியைத் தடை செய்கின்றன. பிரித்தானியா, கனடா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் கூட்டு நடவடிக்கையாக இந்த தடையை அறிவிக்கின்றன.

இது, “ரஷ்ய தொழிலதிபர்களை நேரடியாக தாக்கி ஜனாதிபதி விளாடிமிர் புடடினின் போர் இயந்திரத்தின் இதயத்தில் தாக்கும்” என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

சர்வதேச தங்க வர்த்தகத்தில் லண்டனின் முக்கிய பங்கு மற்றும் இணையான அமெரிக்க, ஜப்பானிய மற்றும் கனேடிய நடவடிக்கைகளின் அடிப்படையில், “இந்த நடவடிக்கை உலகளாவிய ரீதியில் இருக்கும், முறையான சர்வதேச சந்தைகளில் இருந்து பொருட்களை தடை செய்யும்” என்று பிரித்தானியா கூறியது.

2021-ஆம் ஆண்டில் ரஷ்ய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக 12.6 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா இப்போது கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டுள்ள நிலையில், நாட்டின் பணக்காரர்கள் நிதிக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைத் தவிர்க்க தங்கள் சொத்துக்களை தங்கமாக மாற்ற விரைந்துள்ளனர்.

லண்டன் புல்லியன் சந்தை, ஏற்கனவே மார்ச் 7 அன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கையின்படி, ஆறு ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களை நிறுத்தி வைத்துள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கான ஆதரவை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதில் கவனம் செலுத்தும் வகையில், பவேரியன் ஆல்ப்ஸில் ஜி7 நாடுகளின் சந்திப்பின்போது, ​ இந்த நடவடிக்கை வந்தது.

மாஸ்கோவிற்கு எதிராக எடுக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் இதுவரை எவ்வாறு செயல்பட்டன, உக்ரைனுக்கான நிதி மற்றும் இராணுவ உதவி பற்றி விவாதிக்கவும், அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கான நீண்ட மறுசீரமைப்புகளைப் பார்க்கவும் G7 எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website