வெறும் வயிற்றில் திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
திராட்சை பழமானது பச்சையாக இருக்கும் போதும் உலர வைத்து எடுக்கும் போதும் எப்போது ஒரே மாதிரியாக தான் இருக்கும். திராட்சையில் சுமார் 60 வகைகள் உள்ளன.
இதில் புளிக்கும் இனத்தை விடப் புளிப்பு இல்லாத இனமே மிகச் சிறந்த பலன் தருவதாகும்.
உங்கள் நல்வாழ்வுக்கு அதிசயங்களைச் செய்யக்கூடிய ஒரு பானமான திராட்சை நீர் இருகின்றது. அது எவ்வாறு உடலிற்கு நன்மையை தருகின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
திராட்சை நீரின் நன்மை
- திராட்சைகள் காரத்தின் வளமான மூலமாகும், இது உங்கள் உடலில் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- புரதச்சத்து நிறைந்த திராட்சை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
- உயர் இரத்த அழுத்தத்துடன் போராடுகிறீர்கள் என்றால், திராட்சை தண்ணீரை தினமும் எடுத்துக்கொள்வது சிறந்தது.
உடம்பில் இரும்புச் சத்தானது குறைவாக இருந்தால், வெறும் வயிற்றில் திராட்சை நீரைப் பருகி, உங்கள் இரும்புச் சத்தை அதிகரித்துக்கொள்ளவும்.
வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிரம்பிய திராட்சை, ஆரோக்கியமான சருமம் மற்றும் பளபளப்பான கூந்தலை தருகிறது.
திராட்சையும் இன்சுலின் வினைத்திறனை மேம்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
திராட்சை தண்ணீர் தயாரிப்பது எப்படி
- 200 மில்லி தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
- வெந்நீரில் 80-90 கிராம் உலர் திராட்சை சேர்த்து இரவு முழுவதும் ஊற விடவும்.
- காலையில், திராட்சையை நீக்கி, மெதுவாக தண்ணீரை சூடாக்கவும்.
- பின் காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன் இதை குடிக்கவும்.