வேள்பாரி கதையின் காட்சிகள் திருட்டு: இயக்குனர் ஷங்கர் கோபமான அறிக்கை!

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது ஷங்கர் ட்விட்டரில் கோபமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். தான் வாங்கி வைத்திருக்கும் வேள்பாரி நாவல் கதையில் இருந்து சிலர் காட்சிகளை திருடி படமாக்கி இருப்பதை சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரெய்லரில் பார்த்ததாக குறிப்பிட்டு எச்சரித்து இருக்கிறார்.
சு.வெங்கடேசன் எழுதிய வீர யுக நாயகன் வேள் பாரி தமிழ் நாவலின் முக்கிய காட்சிகளை திருடி, அனுமதி இல்லாமல் பல படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரெய்லர் ஒன்றில் நாவலின் முக்கிய காட்சி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
வேள்பாரி நாவலின் காட்சிகளை படங்கள், வெப் சீரிஸ் அல்லது எதிலும் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஷங்கர் எச்சரித்து இருக்கிறார்.