ஸ்ரீதேவியின் கடைசி ஆசை நிறைவேறப் போகுது…

October 27, 2022 at 4:23 pm
pc

தன் மூத்த மகள் ஜான்வி கபூர் குறித்த ஸ்ரீதேவியின் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது.

கௌரி ஷிண்டே இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அது தான் கௌரி இயக்கிய முதல் படமாகும். இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் ரிலீஸாகி 10 ஆண்டுகள் ஆனதை படக்குழு அண்மையில் கொண்டாடியது. ஸ்ரீதேவியை அடுத்து அவரின் மூத்த மகள் ஜான்வியுடன் படம் பண்ண விரும்புகிறார் கௌரி.

ஜான்வி

கௌரி ஷிண்டே கூறியதாவது, நான் ஜான்வியுடன் ஸ்க்ரிப்ட் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் விரைவில் சேர்ந்து படம் பண்ணுவோம். ஜான்வி குழந்தையாக இருந்தபோதில் இருந்து அவரை எனக்கு தெரியும். எனக்கு அவர் இன்னும் குழந்தை தான். நான் ஜான்வியை வைத்து படம் பண்ண விரும்புகிறேன் என்றார். இந்நிலையில் கௌரி இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருப்பதாக ஜான்வி கபூர் கூறியிருக்கிறார். அந்த படத்தை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார் ஜான்வி.

அம்மா

ஜான்வி கபூர் கூறியதாவது, நான் கௌரி ஆன்ட்டி படத்தில் நடிக்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. கௌரி ஆன்ட்டி எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். இங்கிலீஷ் விங்கிலீஷ் செட்டுக்கு சென்றது நினைவிருக்கிறது. அம்மா அப்பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தார் என்றார்.

ஆசை

ஜான்வி மேலும் கூறியதாவது, நீ கௌரி படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என அம்மா பலமுறை என்னிடம் கூறினார். நான் கௌரி ஆன்ட்டி படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் அம்மாவின் கனவு, ஆசை. கௌரி ஆன்ட்டி என் குடும்பத்தில் ஒருத்தர் என்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website