10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் கத்தியால் குத்திக்கொலை
10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் 5 மாணவர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
டெல்லி மாநிலம் புராரியை சேர்ந்த டிபன்சு என்பவர் இதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆதர்ஷ் நகரியில் வெள்ளிக்கிழமை நடந்தது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமே கொலையில் முடிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பள்ளியில் டிபன்சுவுக்கும், சக மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்கு செல்லும் வழியில் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் தீபன்சுவை சரமாரியாக குத்தினர். படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.