13 வயது சிறுமியை கடத்தி போதைப்பொருள் கும்பல் பலாத்காரம்…!
டெல்லியில் 13 வயது சிறுமியை கடத்தி போதைப்பொருள் கும்பல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தெற்கு டெல்லியில் உள்ள வீட்டில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் டைகிரிஸ் பகுதியில் கைவிடப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில் சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாக போலீசார் தெரிவித்தனர். இரவு மீண்டும் வீடு திரும்பாததை அடுத்து, சிறுமி உறவினர்கள் அல்லது தோழி வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும் என்று அவரது தந்தை நினைத்தார். பின்னர் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 26 ஆம் தேதி கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மே 1 அன்று தெற்கு டெல்லியில் கைது செய்யப்பட்டார். காணாமல் போன சிறுமியின் சுவரொட்டிகளைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், சிறுமி குறித்து போலீசாருக்குத் தெரிவித்தார்.
சாகேத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே காணாமல் போன சிறுமியை போலீசார் மீட்டபோது, அவர் போதையில் இருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.
இந்த வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.