15 அடி நீள ராஜநாகம்! பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

பாம்புகளை பிடிக்கும் நபர் ஒருவர் 15 அடி நீள ராஜநாகமொன்றை பத்திரமாக மீட்டு காட்டுக்குள் விடும் வீடியோ காட்சிகள் பார்ப்போரை திகிலூட்டச் செய்துவிடுகிறது.
இந்தியாவில் நபர் ஒருவரின் காரில் பெரிய நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது.
இதை பார்த்ததும் உடனடியாக பாம்பு பிடிப்பவரை அழைத்துள்ளார், விரைந்து வந்த நபரும் 15 அடி நீள ராஜநாகத்தை பத்திரமாக மீட்டு காட்டுக்குள் விட்டுச் சென்றார்.
இந்த வீடியோ காட்சிகளை Susanta Nanda (IFS அதிகாரி) டுவிட்டரில் வெளியிட வைரலாகி வருகிறது.
அதில், உணவுச்சங்கிலி சீராக இருப்பதற்கு ராஜ நாகங்கள் முக்கியமான ஒன்று, இதில் 15 அடி நாகம் மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.
முறையான பயிற்சி பெற்ற பாம்பு பிடிப்பவர் இதை நிகழ்த்தினார், நீங்களாக சுயமாக இதை செய்யவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.