16 வயது சிறுமியை கத்தியால் குத்திக் கொன்ற காதலன்: கல்லால் முகத்தை சிதைத்த பயங்கரம்!

May 30, 2023 at 10:12 am
pc

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 16 வயது இளம்பெண் 40 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை 16 வயது இளம்பெண் ஒருவர் அவரது காதலரால் சஹாபாத்(shahbad) பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே பலமுறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் சாக்ஷி (shakshi,16) எனவும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர் 20 வயதுடைய இளைஞர் சாஹில்(sahil) என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அந்த சிசிடிவி காட்சியில் பாதிக்கப்பட்ட பெண், நண்பர் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்ட இருந்த நிலையில், இளைஞர் ஒருவரால் இடைமறிக்கப்பட்டு பலமுறை கத்தியால் குத்தப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் அந்த இளைஞர் அருகில் இருந்த கான்கிரீட் கற்களை எடுத்து இளம் பெண்ணின் முகத்தை கொடூரமாக தாக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

தற்போது கொலை செய்யப்பட்ட பெண்ணும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முந்தைய நாள் இருவருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டு பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் 16 வயது இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற இளைஞர் மீது 302 IPC சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொலிஸார் தேடி வருகின்றனர்.

சாஹிலை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் விரைவாக கைது செய்யப்படுவார் என்றும் டெல்லி வடக்கு பகுதி கூடுதல் டிஜிபி ராஜா பந்தியா உறுதியளித்து இருந்த நிலையில் தற்போது இளைஞர் சாஹிலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website