30 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்தில் இணையும் அரவிந்த்சாமி
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் 170ஆவது படத்தை டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இப்போது அப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரவிந்த் சாமி தன்னுடைய அறிமுகப் படமான தளபதி படத்திலேயே ரஜினியோடு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் உண்மையாக இருப்பின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர்.