67 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு!
67 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் படி, வழிகாட்டு முறைகளை மீறி செயல்படும் இணையதளங்கள் முடக்கப்படுகின்றன.
பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், ஆபாசத்தைப் பரப்பும் வகையிலும் செயல்பட்டதாக இந்த இணையதளங்களை முடக்க உத்தராகண்ட் உயர்நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 27- ஆம் தேதி அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி, இணைய நிறுவனங்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று (29/09/2022) உத்தரவிட்டிருந்த நிலையில், இணையதளங்கள் முடக்கப்பட்டது.