75வது சதத்தினை தவறவிட்ட கோலி! 8 ரன்னில் அவுட் ஆனதால் ரசிகர்கள் அதிர்ச்சி

January 18, 2023 at 4:15 pm
pc

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ரோகித் 34

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டிய ரோகித் சர்மா 38 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கோலி அவுட் 

அடுத்து களமிறங்கிய விராட் கோலி 8 ஓட்டங்களில் இருந்தபோது சான்ட்னர் பந்துவீச்சில் போல்டானார். எப்படி பந்து ஸ்டம்ப்பை தாக்கியது என்று அவர் அதிர்ச்சியுடன் பார்த்தார்.

இலங்கைக்கு எதிராக 74வது சதத்தினை அடித்த கோலி, இன்றைய போட்டியில் 75வது சதத்தினை எட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரது விக்கெட் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.     

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website