கிரைம்

கணவனின் ஆணுறுப்பை அறுத்த மனைவி: அதிர வைத்த சம்பவம்!

Quick Share

தலைநகர் டெல்லியில் சேர்ந்தவர்கள் தம்பதி. இவர்களுக்கிடையே நேற்று திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பெண், தனது கணவரின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அந்த நபர், உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாகி இருக்கும் அந்த பெண்ணை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் கணவனின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுக்குள் கிடந்த இளைஞர்களின் சடலம்: போலீசார் தீவிர விசாரணை!

Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள அரியாணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆசைத்தம்பி. இவரது மகன் ராஜேஷ் (20) ராஜேஷ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (26) ஆகிய இருவரும் நேற்று இரவு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை வரை இவர்கள் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் காட்டுப் பகுதியில் தேடியுள்ளனர்.

அதே நேரத்தில், கோமாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு தைலமரக் காட்டுக்குள் இரு இளைஞர்கள் சடலமாக கிடப்பதாக தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில், அங்கு சென்று பார்த்த உறவினர்கள் கதறி அழுததுடன் கந்தர்வக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

மேலும், இறந்தவர்களின் உடலில் மின்சாரம் தாக்கிய காயங்கள் இருந்ததால் கோமாபுரம் பகுதியில் பன்றிக்காக விவசாயிகள் அமைத்துள்ள மின் வேலியில் சிக்கி இருவரும் இறந்த நிலையில் அதனை மறைக்க யாரோ மர்ம நபர்கள் இருவரது சடலங்களையும் நடுக்காட்டுக்குள் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும், எந்த தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள் சடலங்களை யார் கொண்டு வந்து போட்டது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். 

இதற்கிடையில், சடலமாக கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், கந்தவர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முயல் வேட்டைக்கு சென்ற இருவர், மர்மமான முறையில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கந்தர்வக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையை உலுக்கிய கொடூர கொலை!

Quick Share

சென்னையில் அயன் பாக்ஸால் சூடு வைத்து 15 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள மேத்தா நகரில் வசித்து வருபவர் முகமது நவாஸ். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முகமது நவாஸ் பழைய கார்களை வாங்கி விற்று வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி நாசியா. இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் வீட்டை பராமரிப்பதற்காக 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்கு வைத்துள்ளனர்.

தஞ்சாவூரை சேர்ந்த அந்த சிறுமி தந்தை இல்லாததால் குடும்ப வறுமை காரணமாக அமைந்தகரையில் உள்ள முகமது நவாஸ் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். இந்நிலையில் நவாஸின் வீட்டில் சிறுமி சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வெளியானது. உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று போலீசார் கதவை திறந்து பார்த்தபோது குளியல் அறையில் சிறுமி சடலமாக கிடந்தது தெரியவந்தது.

சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் நவாஸ் அவருடைய மனைவி நாசியா மற்றும் வீட்டிற்கு அடிக்கடி காரில் வந்து சென்ற லோகேஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் வெளியானது.

வீட்டு வேலைக்காக வந்த அந்த ஏழை சிறுமி தன்னுடைய மகனுடன் நெருங்கி விளையாடுவதை கண்டு எரிச்சலடைந்த நாசியா அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். பலமுறை சொல்லியும் சிறுமி கேட்காமல் குழந்தையுடன் விளையாடியதால் ஆத்திரமடைந்த நவாஸ், லோகேஷ் ஆகியோர் சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடுவைத்து சித்திரவதை செய்துள்ளனர். இந்நிலையில் தீபாவளியன்று சிறுவனுடன் விளையாடிய சிறுமியை கண்டித்த நவாஸ், லோகேஷ், நாசியா ஆகியோர் அயன் பாக்ஸ் மூலம் சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதில் சிறுமி உயிரிழந்த நிலையில் அவருடைய சடலத்தை குளியலறையில் வைத்து மறைத்துள்ளனர்.

வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவது தெரிந்து விடக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் ஊதுபத்தியை கொளுத்தி வைத்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்து சடலத்தை எப்படி வெளியே கொண்டு வந்து அகற்றுவது என தெரியாமல் வீட்டை பூட்டிவிட்டு மூவரும் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக நவாஸ், நாசியா, லோகேஷ், ஜெய்சக்தி, மகேஸ்வரி, சீமா ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்து போக்சோ மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறுமிக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் இருப்பதோடு சிறுமியின் மார்பில் அயன் பாக்ஸில் சூடு வைத்திருப்பது உறுதியானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொடூர சம்பவம் சென்னை அமைந்தகரையில் அரங்கேறி உள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொடைக்கானலில் அரங்கேறிய கொடுமை..தலையில்லாமல் மிதந்து வந்த பெண் உடல்.!!

Quick Share

சுற்றுலா தளமான கொடைக்கானலின் சில்வர் ஃபால்ஸ் நீர்வீழ்ச்சியில் தலையில்லாமல் மிதந்து வந்த பெண் உடல் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடைக்கானல்

தமிழகத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குவது கொடைக்கானல். இதன் இயற்கை அழகு மற்றும் தட்பவெப்ப நிலை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் கூட்டம் அலைமோதியது.

தலை இல்லாமல் மிதந்து வந்த பெண் சடலம்

இந்நிலையில் நேற்று கொடைக்கானலில் தொடக்கத்தில் அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் தலை இல்லாத பெண் உடல் நீரில் மிதந்து வந்தது. இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சடலம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடலில் தலை இல்லாததால் அடையாளம் காண்பதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இறந்த பெண்ணின் காலில் ஒற்றை கொலுசு மட்டும் இருந்திருக்கிறது. அந்த பெண்ணின் உடல் அழுகி இருப்பதால் இறந்து சில நாட்கள் ஆகி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அந்தப் பெண் கொலை செய்யப்பட்டாரா.? அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா.? என்பது தெரியவரும் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

நெஞ்சை பிளக்கும் சம்பவம்.. பெற்ற மகளை தலைகீழாக கட்டி தந்தை செய்த கொடூரம்..

Quick Share

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. கோவிந்த் தாஸ் ராய்க்வார் தாம்னாவில் வசிக்கிறார்.

அவருக்கு 45 வயது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இந்த மகளுக்கு 10 வயது. பேச முடியாது: 10 வயது குழந்தை என்பதால், விளையாட்டுத்தனமாக இருந்துள்ளார்.. இதனால், மிகவும் பேச முடியாத மகளை, கோவிந்த் தாஸ் கொடூரமாக அடித்துள்ளார். இதற்காக தனது 10 வயது மகளின் கால்களில் கயிற்றை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு அடித்துள்ளார்.

வலியால் குழந்தை அலறி அழுகிறது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தான் இந்த கொடுமையை வீடியோ எடுத்தனர்.. மகளை தலைகீழாக கட்டி வைத்து தாக்கியதை பார்த்து பொறுக்க முடியாமல், அங்கு இருந்து ஒருவர் அதே பகுதி வீட்டுக்குள் ஓடி வந்து தடுத்து நிறுத்தி சிறுமியையும் காப்பாற்றினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. அந்த வீடியோவில் தந்தை தனது மகளை கயிற்றால் கட்டி தலைகீழாக தொங்கவிட்டு கண்மூடித்தனமாக அடிக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

அப்போது மகள் வலி தாங்க முடியாமல் “அப்பா, தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்” என்று சைகையில் கெஞ்சுகிறாள். இருப்பினும் கொடூரமான தந்தை தன் மகளை தொடர்ந்து அடிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இச்சம்பவத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் அப்பகுதி மக்கள் போலீசில் புகார் செய்தனர். உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

போலீஸ் அதிகாரி ராஜா தினேஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, ​​”கோவிந்த் ராய்க்வார் தனது மகளை 10 வயது சிறுமி கூறியதை ஏற்காததால் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள ஒருவர் வீடியோ எடுத்து வைரலாக்கினார். தற்போது, ​​கோவிந்த் தாஸை கைது செய்துள்ளோம், மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

சிறையில் ராமாயண நாடகம்: சீதையை தேடுவது போல நடித்து கைதிகள் தப்பியோட்டம்!

Quick Share

சிறையில் நடைபெற்ற இராமாயண நாடகத்தில் சீதையை தேடுவது போல நடித்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். இந்திய மாநிலமான உத்தரகாண்ட், ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கைதிகளை வைத்து ராமாயண நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

அப்போது, சிறையில் உள்ள கைதிகளில் இருவர், அனுமானின் வானர சேனையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டனர். அவர்கள், நாடகத்தின் போது சீதையை தேடுவது போல நடித்து காட்சிக்கு வெளியில் சென்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் திரும்பி வரவே இல்லை. இதனால், கைதிகள் தப்பியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனையிலிருந்த பங்கஜ் என்பவரும், ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த ராஜ்குமார் என்பவரும் இணைந்து நீண்ட நாட்களாக சிறையில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்நிலையில், சிறையில் நடந்த இராமாயண நாடகத்தை பயன்படுத்திக்கொண்டு கைதிகள் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மதுபோதையில் கத்தியால் குத்த வந்த அண்ணன் கொலை: பட்டதாரி இளைஞர் கைது!

Quick Share

வேலூர் மாநகர் சலவன்பேட்டை கச்சேரி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி. சண்முகம் வேலூர் பஜாரில் புகைப்பட கடை வைத்துள்ளார். இவர்களுக்கு மோகன் (வயது 30), பாஸ்கர் (வயது 25) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மோகனுக்குத் திருமணம் திவ்யபாரதி (29) என்பவருடன் திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இளைய மகன் பாஸ்கருக்குத் திருமணம் ஆகவில்லை எம்எஸ்சி முடித்த இவர் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வீட்டில் இருந்தவாறு பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் மோகன் எந்த வேலைக்கும் செல்லாமல் அடிக்கடி மது போதையில் வந்து தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி வீட்டிற்கு மது போதையில் வந்த மோகன் தாய் மற்றும் மனைவியைத் தாக்கி தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தடுக்க சென்ற தம்பி பாஸ்கரைக் கத்தியால் குத்த வந்துள்ளார். தான் கத்தியால் குத்து வருவதை அறிந்த பாஸ்கர் அதனைத் தடுத்து ஆத்திரத்தில் அண்ணன் மோகனை புடவை மற்றும் கயிற்றால் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் உயிரிழந்து கிடந்த மோகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அண்ணனைக் கொலை செய்த பட்டதாரி இளைஞர் பாஸ்கரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடுங்க வைக்கும் சம்பவம்! ஒரே குடும்பத்தில் 18 பேர்கள் மொத்தமாக படுகொலை..

Quick Share

18 உறவினர்களைக் கொன்றது தொடர்பாக தென்னாப்பிரிக்க காவல்துறை மூன்று பேரை கைது செய்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிராமப்புற வீட்டுத் தோட்டத்தில் மொத்தம் 18 பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். இந்த வழக்கில் தற்போது பரபரப்பு திருப்பமாக மூவர் கைதாகியுள்ளதுடன், நான்காவது சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கிழக்கு கேப் மாகாணத்தில் செப்டம்பர் 28 அதிகாலையில் இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது.

லூசிகிசிகியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவயிடத்திலேயே 17 பேர்கள் கொல்லப்பட, 18வது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கொல்லப்பட்டவர்கள் 14 முதல் 64 வயதுடையவர்கள் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதில் 15 பேர்கள் பெண்கள் என்பதுடன், பல பேர்கள் தலையில் சுடப்பட்டு மரணமடைந்துள்ளனர்.

பாரம்பரிய விழாவிற்கு குடும்பத்தினர் அனைவரும் கூடியிருந்த நிலையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் நோக்கம் குறித்து தகவலேதும் வெளியாகவில்லை.

இந்த படுகொலை சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் அதிக தனிநபர் கொலை விகிதங்களைக் கொண்ட நாட்டில் குற்றச் செயல்களில் இருந்து அதிக பொலிஸ் பாதுகாப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞர் கைது!

Quick Share

ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் வேலூர் வழியாக இளைஞர் ஒருவர் கஞ்சா கடத்தி செல்வதாக வேலூர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியே சந்தேகத்திற்கு இடமாக வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் இளைஞர் ஒருவரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒடிசாவைச் சேர்ந்த ஜெயகவுடா என்பதும், 6 கிலோ கஞ்சாவைக் கடத்திச் செல்ல முயன்றதும் தெரிந்தது. அதன் பின்னர் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் ஜெயகவுடாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கேரளாவில் ஜெயகவுடா வேலை செய்து வருவதும், ஒடிசாவில் இருந்து தொடர்ச்சியாக ரயில் மூலம் கஞ்சா கடத்துவதும் தெரிந்தது. 

மேலும் போலீசில் சிக்காமல் இருக்க வேலூர் மாவட்டம் காட்பாடி ஜங்ஷனில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் வந்து, பின்னர் மீண்டும் ரயிலில் ஏறிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். வெளி மாநிலத்தவர்கள் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைக் கடத்தும் போது போலீசில் சிக்காமல் இருக்க, காட்பாடி ஜங்ஷனில் இறங்கி, வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து வேறொரு ரயில் மூலம் செல்லும் நிகழ்வு போலீசார் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதைவிட ஒரு கொடுமை இருக்கமுடியாது..தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர ம...

Quick Share

தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகனுக்கு சூப்பர் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து 7 வருடமாகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தனது 63 வயதான தாயை கொலை செய்துள்ளார் மகன் குச்சொரவி.

பின்னர் இறந்த தாயின் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளார். இதயத்தையும், விலா எலும்புகளையும் எண்ணெயின் வறுத்து சாப்பிட முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. சமைத்து சாப்பிட முயன்ற போது போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு கோலாப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

இந்த நிலையில் மரண தண்டனையை எதிர்ர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது இதை விட கொடூரமான வழக்கை நாங்கள் சந்தித்ததில்லை, குச்சொரவிக்கு ஆயுள் தண்டனை கொடுத்த மற்ற கைதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்.அதே சமயம் இவரை திருத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.

இருப்பினும் இந்த வழக்கில் குச்சொரவி மேல்முறையீடு செய்யத ஒரு மாத கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி !! ஐபோன் டெலிவரி கொடுக்க வந்த ஊழியரை கொன்று கால்வாயில் வீசிய வாடிக்கையாளர்!

Quick Share

ஐபோன் டெலிவரி கொடுக்க வந்த ஊழியரை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசியுள்ள கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், லக்னோ மாவட்டம் சின்ஹட் பகுதியை சேர்ந்தவர் கஜனன். இவர், ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை ஓர்டர் செய்துள்ளார். பின்னர், இந்த ஐபோனை டெலிவரி செய்வதற்காக பரத் சாகு (30) என்பவர் வந்துள்ளார். அப்போது, ஐபோனை கஜனிடம் கொடுத்துவிட்டு பணம் கொடுக்குமாறு ஊழியர் கூறியுள்ளார்.

அதற்கு, கஜனனும் அவரது கூட்டாளியும் சேர்ந்து பரத் சாகுவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்பு, அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசி சென்றுள்ளனர்.

இதையடுத்து, டெலிவரி ஊழியர் பரத் சாகு இரண்டு நாட்களாக வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, டெலிவரி ஊழியர் பரத் சாகு கடைசியாக கஜனனிடம் பேசியது தெரியவந்தது. பின்னர், கஜனை தேடிய நிலையில் அவரது நண்பர் ஆகாஷ் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஐபோனுக்காக டெலிவரி ஊழியரை கொலை செய்தது அம்பலமானது.

இதனை கேட்ட பொலிஸார் ஆகாஷை கைது செய்து கஜனை தேடி வருகின்றனர். மேலும், கால்வாயில் வீசப்பட்ட ஊழியரின் உடலை தேடி வருகின்றனர்.

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு!

Quick Share

கடலூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த கரீம் என்ற 11ஆம் வகுப்பு மாணவன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற கரீம் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.

உடனடியாக உடன் வந்த நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பகுதிக்கு சென்று கரீமை மீட்க முயன்றனர். ஆனால் கரீம் நீருக்குள் மூழ்கியதால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி கரீமின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




You cannot copy content of this Website