Uncategorized

சென்னையில் எந்தெந்த பகுதியில் எவ்வளவு பாதிப்புகள் ! முழு விவரம் இதோ..,

Quick Share

தமிழகத்தில் மொத்தமாக 13,191 பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 743 பேரில் 557 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆகும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர் பகுதியில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

(20.05.2020) சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 43

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 5,882 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,219 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 87 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

ரீ-என்ட்ரிக்கு ரெடியாகிவிட்ட லட்சுமி மேனன், இது தான் அவர் கொடுக்கும் சிகினாலோ !

Quick Share

பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுடன் நாயகியாக அறிமுகமான லட்சுமிமேனன் ரெக்க, நான் சிகப்பு மனிதன், குட்டி புலி போன்ற படங்களில் நடித்தார். கடந்த சில வருடமாக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் தனது படிப்பிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளார் லட்சுமி மேனன். இதற்கு முன் வெயிட்டாக இருக்கிறார் என பலர் சமூக வலைதளங்களில் கமென்ட் செய்ததையடுத்து தன் உடம்பை கட்சிதமாக மாற்றி re-entry ரெடியாகி விட்டார்.

நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியிட்ட போட்டோவில் அவருடைய முதுகில் புதிதாக பெரிய அளவில் டாட்டூ ஒன்றை குத்தியுள்ளார். நேற்று வராது பிறந்தநாளை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடினர். இந்த டாட்டூ கலாச்சாரம் லட்சுமிமேனனை விட்டு வைக்கவில்லை. இதை ட்ரெண்டாக பலர் வைத்துக் பல நடிகைகள் டாட்டூ போட்டுக் கொண்டுள்ளனர். இந்த வரிசையில் லட்சுமிமேனனும் இணைந்துள்ளார். இவருடைய அடுத்த கட்ட முயற்சி என்னவாக இருக்கும் பல ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நடுரோட்டில்.. பட்டப்பகலில்.. அரசியல்வாதி மற்றும் அவரது மகனை வெறித்தனமாக துப்பாக்கியால் ...

Quick Share

பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் அரசியல் பிரமுகரும், அவரது மகனும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஷாம்சோய் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சாலை போடப்பட்டு வந்தது. இந்த சாலை அமைக்கும் பணியில் வயலை ஆக்கிரமித்து நடைபெறுவதாக கூறி வயலின் உரிமையாளர், உள்ளூர் சமாஜ்வாடி கட்சி பிரமுகரான சோட் லால் திவாகரிடம் தகராறு செய்துள்ளார்.

இதனை அடுத்து சமாஜ்வாடி கட்சி பிரமுகர் சோட் லால் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோர் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்ய சென்றுள்ளனர். அப்போது வயலின் உரிமையாளர்கள் ஜித்தேன்ர ஷர்மா, ஷர்மேந்திர ஷர்மா இருவருடன் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்ச்சண்டை அதிகமானதால் அவர்கள், சோட் லாலையும், அவரது மகன் சுனிலையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து துப்பாக்கி சுட்டுக்கொலை செய்த ஜித்தேன்ர ஷர்மா, ஷர்மேந்திர ஷர்மா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொரோனா பிடியில் மாட்டிக்கொண்ட இரு மாநிலங்களில் தலைநகரங்கள்

Quick Share

இந்தியாவில் 4வது ஊரடங்கில் தளர்வுகள் கொடுக்கப்பட்டதால் தலைநகரம் டெல்லியில் வாகனங்கள் இயங்க தொடங்கியுள்ளன. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை. நேற்று மட்டும் ஒரே நாளில் மட்டும் 5,611 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் அதிகமான கொரோனா பாதிப்பு பதிவானது இதுவே முதல்முறையாகும்.

முதல் இரண்டு இடத்தில் இருக்கும் மாநிலமான மகாராஷ்டிரா, தமிழ்நாட்டின் தலைநகரங்களில் 70+ சதவிகித பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 37,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1325 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9639 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 12,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4895 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,750 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3303 பேர் உயிரிழந்த நிலையில் 42,298 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5611 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 140 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அவரு கூட கூட்டிட்டு போனார் ! நான் இப்போ ஒரு நடிகையாகி விட்டேன்..,

Quick Share

தென்னிந்திய திரையுலகில் வளரும் நடிகைகளில் முன்னணியில் இருக்கும் ரஷ்மிக்கா மந்தனா, தான் முதன் முதலாக பார்த்த படத்தை பற்றி மனம் திறந்துள்ளார். சமூக வலைத்தளங்கள் ராஷ்மிகா பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்களை அவரது ரசிகர்கள் கேள்விகளாக கேட்டு வருகின்றனர்.

அதில் ஒரு ரசிகர் ஒருவர் நீங்கள் முதன் முதலில் பார்த்த படம் எது என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர் முதன் முதலில் என்னுடைய தந்தை “கில்லி” படத்திற்கு தான் கூட்டிட்டு போனார். அது ஏன் என்பது எனக்கு தெரியல அத நீங்க அவரிடம்தான் கேட்க வேண்டும். என் தந்தை நிறைய படங்களைப் பார்க்கும் பழக்கம் உடையவர். அவரு கூட படம் பார்க்க போன நான் இப்போ நடிகையாகி விட்டேன் என பதிலளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கார்த்தியுடன் முதல் படத்தில் அறிமுகமாக இருக்கும் நடிகை ரஷ்மிக்காவிற்கு ஏற்கனவே தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கீதாகோவிந்தம் படத்தின் மூலம் பல ரசிகர்களை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகை ஒரு மொழியில் வருவதற்கு முன்பே அவருக்கு ரசிகர்கள் இருப்பது மிகவும் ஆச்சரியப்படவைக்கும் ஒன்றாகும். இது ராஷ்மிகாவிற்கு கிடைத்துள்ளது பெரிய பாக்கியமே !!

பலருக்கு தெரியாத மாளவிகா மோஹனனின் வெளிவராத திறமை..,

Quick Share

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜயுடன் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். பேட்டை படத்தில் இரண்டாவது நாயகியாக சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடித்திருந்தார். முன்னணி மாடலாகவும் நடிகையாகவும் திகழும் மாளவிகா மோகனுக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டனர்.

இவருடைய தந்தை மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் ஒளிப்பதிவாளராக உள்ளார். இவர் தற்போது பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகிவரும் ஆடுஜீவிதம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது தந்தையிடம் மாளவிகா போட்டோகிராபி திறமைகளை கற்றுக்கொண்டு புகைப்படங்களை எடுத்து வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதைப் பற்றி ஒரு தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த 2 வருடமாக நான் கற்றுக்கொண்ட வைல்டு லைப் போட்டோகிராபிகாக மசினகுடி வயநாடு போன்ற இடங்களில் சென்று காட்டு விலங்குகளை போட்டோ எடுத்ததில் சிலவற்றை பகிர்கிறேன் என தெரிவித்தார்.

https://www.instagram.com/p/B6pz5aigRH8/?utm_source=ig_web_button_share_sheet

தவிர்க்கமுடியாத இடத்தில் இருக்கும் பேஸ்புக், அசைக்கமுடியாத சக்தியாக மாற எடுக்கும் நடவ...

Quick Share

உலக அளவில் இணையதள பயன்பாடு மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மக்கள் வெகு நேரம் இதில் செலவிடுவதால் இதன் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது ஆய்வுகள் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒருவர் ஒருநாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போனில் செலவிடுகின்றனர்.

இந்த இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்ய முன்னணியில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மிகப்பெரிய மக்கள் பயன்பாடு உள்ள இந்திய நாட்டில் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது. ஒருபுறம் அம்பானிக்கு இது பாதுகாப்பான விற்பனை என்றாலும். ஃபேஸ்புக் உலக அளவில் அதன் வட்டாரத்தை அதிகப்படுத்தி உள்ளது என்பது தான் உண்மை.

தற்போது சமூக வலைத்தளங்களில் gif மூலம் கமெண்ட் செய்யப்படும் முறை மிகப் பிரபலமானது. இந்த GiF வகைகளை செய்யும் GIPHY நிறுவனத்தை 3,035 கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. பல கோடி பேர் பயன்படுத்தும் இந்த GIPHY நிறுவனத்தை வாங்கியதால் Facebook தனது தரத்தையும் சமூக வலைத்தளத்தில் தனது ஆதிக்கத்தையும் கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாலையில் நடந்த பயங்கரம்.., நின்றுகொண்டிருந்த ட்ரைலர் லாரியில் மோதிய டெம்போ, 24 வெளிமாநி...

Quick Share

மகாராஷ்டிரா மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்பு ரயில் மோதி பல வெளிமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். தற்போது உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் புலம் பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நின்றுகொண்டிருந்த ட்ரைலர் லாரி மீது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற டெம்போ மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் ஏற்பட்ட விபத்தில் லாரியில் தங்கள் சொந்த மாநிலத்திற்கு பயணித்துக்கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானிலிருந்து கிளம்பி, பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் சென்றடைய பயணப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள் லக்னௌ அருகில் அவுரியா மாவட்டத்தில் அவர்கள் பயணம் செய்த லாரியானது மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த “துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை” வேதனை அளிப்பதாகவும், உயிர் இழந்த 24 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

காயமடைந்த அனைவருக்கும் மருத்துவ வசதி வழங்குமாறு முதல்வர் யோகி உத்தரவிட்டதாகவும், அந்த இடத்தை பார்வையிட்டு உடனடியாக விபத்து குறித்து அறிக்கை தயாரிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகவும் மாநில அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அடுத்தடுத்து இது போன்ற விபத்து சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது கவலையளிக்கிறது.

இன்று புதியதாக தமிழகத்தில் 424 பேருக்கு கொரோனா, சென்னையில் அதிகமானோர் பாதிப்பு !

Quick Share

இந்தியா முழுவதும் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருணாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பாக மும்பை மாநகரில் கருணாவின் தாக்கம் கடுமையாக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 434 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 310 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது. தமிழகத்தில் தொடர்ந்து சென்னையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் 10,108 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்று 11,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்த பரிசோதனையில் தொற்று ஏற்பட்டவர்களில் 253 பேர் ஆண்கள், 181 பேர் பெண்கள் ஆவர்.

தமிழகத்தில் மொத்தமாக 6,642 ஆண்கள், 3,463 பெண்கள், 3 திருநங்கைகள் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/chennaicorp/status/1261303513637769220

13 கூலி தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு …!!!

Quick Share

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மாச்சவரம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் அருகே உள்ள மிளகாய் மண்டியில் பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று இரவு பணிமுடிந்து 30 தொழிலாளர்கள் டிராக்டரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, ராபர்லா அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதனால் டிராக்டரின் மீது மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து 9 பெண்கள் உட்பட 13 கூலித்தொழிலாளிர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிராக்டர் விபத்து குறித்து அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோக ரெட்டி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5,00,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அத்தொகுதி சட்டமன்ற மேலும் ஆந்திர ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய பொருட்கள் வீணாகக்கூடாது என்பதற்காக குளிர்சாதன கிடங்குகள், உட்கட்டமைப்பை வலுப்படு...

Quick Share

இந்தியாவில் தற்போது ஊரடகால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதை சரிசெய்ய மத்திய மணிலா அரசுகள் திணறிவருகிறது. பலர் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு 20 லட்சம் கோடிக்கு மதிப்பிலான திட்டத்தை அறிவித்து வருகிறது. விவசாயம், பால் வளம் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறார். அதில் அவர் தெரிவித்தாவது ” குளிர்சாதன கிடங்குகள் மற்றும் சாதாரண கிடங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை சேகரிக்க 50% மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதிக வளர்ச்சி உள்ள இடத்தில் இருந்து பற்றாக்குறை இடங்களுக்கு பொருட்களை அனுப்பினால் 50% போக்குவரத்து மானியம் அளிக்கப்படும்என தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிங்க பயன்பெறும் வகையில் குறுகிய கால பயிர்க் கடன் வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். போதுமான குளிர்பதன வசதி இல்லாததால் வேளாண் பொருட்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாய துறையில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குளிர்பதன கிடங்குகள் இந்த தொகையின் மூலம் மேம்படுத்தப்படும். வேளாண் துறை, கூட்டுறவு வங்கிகள், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் தொடக்க நிறுவனங்கள் இதனால் பலன் அடையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடிக்க மத்திய அரசிடம் விளக்கம் கொடுக்கப்படும்

Quick Share

மகாராஷ்டிரா உள்ளது. இங்கு மட்டும் 27,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்த்தக நகரமான மும்பையில் நேற்று ஒரு நாள் மட்டும் 1,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 16,500 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால், மும்பை, புனே, சோலாப்பூர், அவுரங்காபாத் மற்றும் நாசிக்கில் மலேகான் டவுண் போன்ற பகுதிகளில் மே.31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். இந்த நிலை நிலை குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு விளக்கம் அளிக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் 9,674 பேருடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 9,267பேருடன் குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரதமர் மோடி கூறியது போன்று அடுத்தகட்ட நடவடிக்கை மாநில முதவர்களிடம் பரிந்துரையின் படி நாடாகும் என சமீபத்தில் மக்களிடம் நடத்திய உரையாடலில் தெரிவித்தார்.




You cannot copy content of this Website