கோத்தபய ராஜபக்சே அதிரடி !!! இலங்கை – சீனா உடனான 99 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார்
கொழும்பு: சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு இலங்கையின் ஹம்பாந்தோடா துறைமுகத்தை 99 வருடம் குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தார்.
2017-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க்கே இலங்கையின் ஹம்பாந்தோடா துறைமுகம் சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு 99 வருடம் குத்தகைக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த துறைமுகத்தை சீனா போர்க்கப்பல் நிறுத்தும் தளமாக மாற்றலாம் என்னும் அச்சம் இருந்தது. மேலும் இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
சீனா தரப்பில் இந்த துறைமுகம் இந்தியா-ஐரோப்பிய கண்டத்தை இணைக்கும் பாலமாக இருக்கும் , இதனோடு வர்த்தகம், இலங்கையின் பொருளாதாரம் பெருகும் எனவும் விளக்கம் அளித்தது. இலங்கை தரப்பில் ஒருபோதும் ராணுவ தளம் அமைக்க விடமாட்டோம் என மறுத்தது. இலங்கை தேர்தலில் நன் வெற்றிபெற்றால் சீனா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என கோத்தபய ராஜபக்சே வாக்குறுதி கொடுத்தார். இப்போது அதிபரான முதல் வேலையாக தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.