உலகம்

‘மிகவும் ஆரோக்கியமான தாய்’!! 69 குழந்தைகளை பெற்றெடுத்த நம்ப முடியாத உலக சாத...

Quick Share

ஒரு குழந்தையை கருத்தரித்து பெற்றெடுத்து வளர்ப்பது என்பது சாதாரண செயலல்ல, அதற்கு நிறைய அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புத் தேவை. உடல்ரீதியான மாற்றங்கள் முதல் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் வரை, கர்ப்பத்திற்கு உடல்ரீதியாக அதிக அர்ப்பணிப்பு தேவைப்படலாம். ஒரு குழந்தையை ஒன்பது மாதங்கள் சுமப்பது என்பது ஒரு பெண்ணின் உடலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகிறது.

பெற்றோராக மாறும்போது நீங்கள் பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாகலாம் மற்றும் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வது நிதிரீதியான சவால்களை ஏற்படுத்தலாம். அதனால்தான் பல பெண்கள் தற்போது ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு பெண் 69 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ரஷ்யாவில் வசித்த வாலண்டினா வாசிலியேவ் என்ற பெண் 1725 மற்றும் 1765 க்கு இடையில் 69 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. மாஸ்கோவில் உள்ள அரசாங்கத்திற்கு ஒரு உள்ளூர் தேவாலய அறிக்கையின்படி, ரஷ்ய விவசாயி ஃபியோடர் வாசிலியேவின் மனைவி திருமதி. வாசிலியேவ், 16 ஜோடி இரட்டைக் குழந்தைகளையும், ஏழு மூன்று குழந்தைகளையும், நான்கு நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்தார். இவை அனைத்தும் 27 தனித்தனி பிரசவங்கள் மூலம் 1725 மற்றும் 1765. அதாவது மொத்தம் 69 குழந்தைகள் பிறந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. திருமதி. வாசிலியேவ் தனது பெயரை கின்னஸ் புத்தகத்தில் ‘மிகவும் ஆரோக்கியமான தாய்’ என்று பதிவு செய்துள்ளார். அதோடு, ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில், ஃபியோடர் வாசிலியேவ் பின்னர் மற்றொரு பெண்ணை மணந்தார், அவர் எட்டு முறை கர்ப்பமாகி 18 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். வாசிலியேவின் இரண்டு மனைவிகளுக்குப் பிறந்த 87 குழந்தைகளில் 84 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்; மீதமுள்ள 3 குழந்தைகளும் பிறந்த சில நாட்களில் இறந்தனர்.

ஆண் என தெரியாமல் 27 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவருக்கு.., திருமணத்திற்கு முன்பு அதிர்ச்சி

Quick Share

27 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவருக்கு திருமணத்திற்கு முன்பு தான் ஆண் என்று அறிந்தததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சீன பெண்

மத்திய சீனாவில் வசித்து வரும் பெண் லி யுவான். இவர், சீரற்ற மாதவிடாய் பிரச்சனை மற்றும் தாமதமான மார்பக வளர்ச்சி ஆகியவற்றை எதிர்கொண்டு வந்துள்ளார். 

இதற்காக தன்னுடைய 18 வயதில் இருந்தே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு வந்துள்ளார். அப்போது, ஹார்மோன் அளவுகள் அசாதாரணமாக இருப்பதும், கருப்பை பிரச்சனை இருப்பதும் கண்டறியப்பட்டது.

அதற்காக முதலில் குரோமோசோம் பரிசோதனையை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால், லி யுவானும், அவரது குடும்பத்தினரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தனர். 

பின்பு, சில ஆண்டுகளுக்கு பிறகு லி யுவானை திருமணத்திற்கு முன்பு முழுமையான பரிசோதனை மேற்கொள்ளுமாறு மூத்த மகப்பேறு மருத்துவ நிபுணரான டுவான் ஜீ அறிவுறுத்தினார்.

அப்போது தான் அவருக்கு congenital adrenal hyperplasia (CAH) என்ற பிரச்சனை இருப்பது தெரியவந்தது. அதாவது ஆணுக்குரிய குரோமோசோம்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அவருக்கு, ஆணுக்குரிய பிறப்புறுப்பு அடிவயிற்றின் உள்ளே இருந்தது. ஆனால், அவர் பெண்ணாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த குறைப்பாடு, 50,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்பதற்கு லி யுவானுக்கு சவாலாக இருந்தது. 

ஆப்கானில் கொட்டித்தீர்த்த கனமழை! வெள்ளத்திற்கு 50 பேர் பலி

Quick Share

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 50 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானின் தலைநகர் காபூல் உட்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் வீடுகளையும் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.      

15 மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் நிகழ்வு!! ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக...

Quick Share

அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக 4 பிள்ளைகள் உள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நான்கு பிள்ளைகளும் ஒரே உருவம் கொண்டவை. இது 15 மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் நிகழ்வு ஆகும்.

மே 1ஆம் திகதி இந்த தம்பதி IVF உதவியின்றி தங்கள் பிள்ளைகளை வரவேற்றனர். ஒரு கருவுற்ற முட்டை 4 கருக்களாகப் பிரிந்ததன் விளைவாக இவ்வாறு உருவாகும். 

இவர்களுக்கு ஏற்கனவே இரட்டைக் குழந்தைகள் உள்ள நிலையில், சந்து மீண்டும் கர்ப்பம் தரித்தார். பின்னர் அதுவும் இரட்டைக் குழந்தைகள் தான் என அறிந்து அவர் ஆச்சரியமடைந்தார். 

பிறந்த குழந்தைகள் மருத்துவமனையில் உணவுக்குழாய் மூலம் ஊட்டச்சத்தைப் பெற்று, CPAP இயந்திரத்தின் உதவியுடன் சுவாசிக்கின்றனர்.

கருவுறுதல் மருந்தின் உதவியின்றி ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுப்பது மிகவும் அரிதானது. இதுவரை 72 ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் மட்டுமே உள்ளன மற்றும் அமெரிக்காவில் ஒரு சில பேருக்கு மட்டுமே இது நிகழ்ந்துள்ளது.

குழந்தைகளின் தாய் சந்து கூறும்போது, ‘நாங்கள் எந்த வகையிலும் முயற்சிக்கவில்லை, ஆனால் நாங்கள் உற்சாகமாக இருந்தோம். எங்கள் மகன்களுக்கு மற்றொரு உடன்பிறப்பைக் கொடுக்கும் யோசனையை நாங்கள் விரும்பினோம். ஆனால் நாங்கள் 4 என அறிந்தபோது மகிழ்ச்சியில் திளைத்தோம் என உற்சாகமாக தெரிவித்தார்.

பேன்ட் பைக்குள் பாம்புகளை கடத்தி சென்ற நபர்… வைரல் புகைப்படங்கள்

Quick Share

 பேன்ட் பைக்குள் கேசுவலாக பாம்புகளை வைத்து அதனை கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரல் புகைப்படம்

ஒரு நாட்டில் இருந்து இன்னுமொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்ல முடியாது. அப்படி கடத்தி சென்றால் அவர்கள் விமான நிலையத்தில் வைத்து பிடிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு பயணி, பாம்புகளை கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக சிறிய பாம்புகளை ஒரு பையில் வைத்து அதனை தனது பேன்ட் பைக்குள் கேசுவலாக வைத்திருக்கிறார்.

இந்த சம்பவம் மியாமி சர்வதேச விமான நிலையில்தான் இடம்பெற்றுள்ளது. இவர் பாதுகாவலர்கள் சரியாக சோதனை செய்யாமல் விட்டு விட்டனர்.

இதனால் அவர் பல அடுக்கு பாதுகாப்பை கடந்து, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்த நேரத்தில் கண்காணிப்பு கேமராவில் பார்த்து சந்தேகித்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக அவரை பிடித்த அதிகாரிகள், மீண்டும் அவரிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அவரது பேன்ட் பைக்குள் இருந்த சிறிய பையை பிரித்து பார்த்தபோது, சிறிய பாம்புகள் ஊர்ந்து வெளியே ஓடின.

இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை அடுத்த உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

அதிர்ச்சி சம்பவம்!! 5 மாதகுழந்தை மாரடைப்பால் மரணம்..!

Quick Share

பிரித்தானியாவின் லேகோலாந்தில் குழந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லேகோலாந்து விண்ட்சர் (Legoland Windsor) பொழுதுபோக்கு பூங்காவில் ஐந்து மாத கைக்குழந்தை மாரடைப்பு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த குழந்தை மருத்துவமனையில் ஆபத்தான (Critical) நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. டேம்ஸ் வேலி காவல்துறை (Thames Valley Police) தகவல் படி, வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது..

இதையடுத்து, குழந்தை பாதுகாப்பு துறையை சேர்ந்த அதிகாரி ஜோ ஈல் (Zoe Eele) அவர்கள், “குழந்தையின் குடும்பத்தினருடன் எங்கள் அனைத்து சிந்தனைகளும் இருக்கின்றன. இது மனதை உருக்கும் சம்பவம். இந்த கடினமான நேரத்தில் குடும்பத்தினருக்கு முடிந்த அத்தனை ஆதரவையும் நாங்கள் வழங்கி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், Essex (எசெக்ஸ்) மாவட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர், குழந்தையை கவனிக்காமல் விட்டதால் மோசமான காயம் ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக வியாழக்கிழமை மதிய உணவு நேரத்தில் கடலோர காவல் தலைமையக சவாரி (Coastguard HQ ride) அருகில் சாட்சியங்கள் எவரேனும் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் ஜூலை 26 வரை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் தற்போது வேறு யாரையும் காவல்துறை தேடவில்லை.

2 ஆண்டுகளில் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்! அரிய வகை நோயால் பாதிப்பு! என்ன நடந்தது?

Quick Share

சில அரிய நோய்கள் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் தாக்குகின்றன. அதேபோல் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் ஒன்று 2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தோல் இயற்கையான நிறத்தை இழந்து வெளிர் வெள்ளை நிறமாக மாறும் நிலையை விட்டிலிகோ என்று அழைக்கப்படுகிறது. இந்த அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த ஸ்மித் என்பவரால் வளர்க்கப்பட்ட பஸ்டர் என்ற 4 வயது நாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் கருப்பாக இருந்தது.

ஆனால், விட்டிலிகோ நோயால் கடந்த 2 ஆண்டுகளில் படிப்படியாக நிறம் மாறி தற்போது முற்றிலும் வெண்மையாக மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை reddit தளத்தில் வெளியிட்டு, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

317 உடல் எடைகொண்ட 34 வயது வாலிபர் மரணம்!!அதிர்ச்சி தரும் மரண காரணம்..

Quick Share

பிரித்தானியாவின் மிகவும் உடல் பருமன் கொண்ட நபர் தனது 34வது வயதில் மரணமடைந்துள்ள நிலையில், அவரது மரணத்தின் காரணம் வெளியாகியுள்ளது.

உடல் எடை 317 கிலோ

பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயர் பகுதியில் வசித்து வந்த Jason Holton என்பவரே தமது 34வது பிறந்தநாளுக்கும் ஒரு வாரம் முன்னர் ராயல் சர்ரே மாவட்ட மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.

இறக்கும் போது அவரது உடல் எடை என்பது 317.51 கிலோ இருந்துள்ளது. உறுப்பு செயலிழப்பு மற்றும் உடல் பருமனால் இறந்தார் என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜேசனின் தாயார் 55 வயதான லீசா தெரிவிக்கையில், மருத்துவர்கள் அவரை மீண்டும் காப்பாற்ற முடியும் என்று நினைத்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போனது என்றார். 

சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்துள்ளார் என்றும், இறுதியில் அவரது சிறுநீரகம் செயலிழந்தது என்றும் லீசா குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் ஜேசன் மரணமடையலாம் என்றும் மருத்துவர்கள் கூறியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஏப்ரல் 27ம் திகதி ஜேசன் மரணமடைந்ததாக லீசா தெரிவித்துள்ளார். உடற்கூறு ஆய்வில், உடல் உறுப்பு செயலிழப்பு மற்றும் உடல் பருமனால் இறந்தார் என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிருகங்களுக்கு எக்ஸ்ரே எடுக்கும் கருவி

தந்தையின் திடீர் மரணத்திற்கு பின்னர் ஜேசன் அதிகமாக உணவு உட்கொள்ள தொடங்கியுள்ளார். 2015ல் பிரித்தானியாவிலேயே உடல் பருமனான நபராக ஜேசன் மாறியுள்ளார்.

2020ல் அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதும், கிரேன் மூலமாக அவரை குடியிருப்பில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றினர். மட்டுமின்றி, உடல் பருமனை குறைக்கும் சிகிச்சையும் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட, அவரை லண்டன் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி, வரிக்குதிரைகள் போன்ற மிருகங்களுக்கு எக்ஸ்ரே எடுக்கும் கருவியால் ஆய்வு செய்ய முடிவானது.

ஆனால் இறுதியில் அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது. அதிக செலவு காரணமாகவும், ஜேசனின் நிலை தொடர்பில் மருத்துவர்களுக்கு கவலை இருந்ததாலும் அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. 

இதனிடையே, ஜேசனால் இனி நடக்க முடியாது என்ற சூழல் உருவானதும், ஹாம்ப்ஷயர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் அவர் மாற்றப்பட்டு, படுக்கையிலேயே மரணம் வரையில் வசித்துள்ளார்.

என்னடா நடக்குது இங்க… வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை விருந்தளிக்கும் அ...

Quick Share

ஹிம்பா பழங்குடி மக்கள் தங்களுக்கென உள்ள தனியான விதிமுறையில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தளிக்கும் விசித்திர பழக்கத்தை கொண்டுள்ளனர். உலகத்தின் தற்போதைய முன்னனேற்றம் எவ்வளவாக இருந்தாலும் தங்ஙளின் பழக்க வழக்கத்தை மாற்றாமல் அப்படியே வாழும் பழக்கத்தை கொண்டுள்ள மக்கள் பழங்குடி மக்களாவர்.

அப்படி ஒரு பழங்குடியினர் தான் இந்த ஹிம்பா பழங்குடி மக்கள். இவர்களின் செயல்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்திருகிறது.

இவர்களின் பழக்கவழக்கங்களைப் பார்த்து பலரும் விலங்குகள் என்று வர்ணிக்கின்றனர். ஆனால் இந்த பழங்குடியினர் தங்கள் மரபுகளை பாதுகாத்து வருகிறார்கள்.

இன்றைய காலத்தில் இந்த பழங்குடியினர் 50,OOO பேர் உள்ளனர். இந்த பழக்குடியினர் தண்ணீரில் குளிப்பதை அவர்களே தடை செய்து வைத்துள்ளனர்.

இவர்கள் தண்ணீரில் குளிப்பதற்குப் பதிலாக புகைப் போட்டுக் குளிப்பார்கள். இது புகை குளியல் என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பழங்குடியினரில், வெளியூர்களில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு உணவுடன் வீட்டு பெண்களும் சேர்ந்து பரிமாறப்படுகிறது.

இவர்கள் உணவு தேடுவதற்கே தங்களின் நேரத்தை செலவிடுகிறார்கள். வீட்டிற்கு வருபவர்களுக்கு மனைவிகளை விருந்தளிப்பதற்காகவே அவர்களின் வீட்டில் தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தையும் வம்புக்கிழுக்கும் ரஷ்யா!

Quick Share

உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து பல நாடுகள் மீது விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது ரஷ்ய தரப்பு. பிரித்தானியா முதல் பல மேற்கத்திய நாடுகளுக்கு புடின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில், மாஸ்கோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரை அழைத்து மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர். அந்த விடயம் பிரான்சுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, சுவிட்சர்லாந்து மீதும் விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளது ரஷ்யா.

ஜூன் மாதம், 15 மற்றும் 16ஆம் திகதிகளில், சுவிட்சர்லாந்திலுள்ள Bürgenstock என்னுமிடத்தில் உக்ரைன் அமைதி உச்சி மாநாடு ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது. 

இந்நிலையில், அந்த உச்சி மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள புடின், அந்த மாநாட்டிற்கு ரஷ்யா அழைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும், மாஸ்கோ இல்லாமல் எதையும் முடிவு செய்ய முடியாது என்றும், மாநாட்டில் ரஷ்ய தூதுக்குழு இருக்காது என்பதால், ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது என்ற கருத்து உருவாகலாம் என்றும் புடின் கூறியுள்ளார்.

ஆனால், புடினுடைய விமர்சனத்திற்கு சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் பதில் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், வெளிநாட்டு தலைவர்களின் கருத்துக்கள் குறித்து தாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் பதற்றம்: இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பலை கைப்பற்றியது ஈரான்!

Quick Share

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஆயுதப் படைகள் ஹோர்முஸ் கடற்பரப்பில் இஸ்ரேலுடன் தொடர்புடையதாக கருதப்படும் கொள்கலன் கப்பலைக் கைப்பற்றியுள்ளன. இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) கப்பலை கைப்பற்றியதாக ஈரானிய அரசு ஊடகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

போர்ச்சுகல் கொடியுடன் கூடிய எம்எஸ்சி ஏரீஸ் (MSC Aries) என்ற கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துறைமுகத்தில் இருந்து இந்தியா செல்லும் வழியில் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

இது இஸ்ரேலிய பில்லியனர் இயல் ஒபர் (Eyal Ofer) மற்றும் அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் சோடியாக் குழுவின் ஒரு பகுதியான லண்டனை தளமாகக் கொண்ட சோடியாக் மரைடைமுடன் தொடர்புடையது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புஜைராவிலிருந்து வடகிழக்கே 50 கடல் மைல் (92 கிமீ) தொலைவில் உலக வர்த்தகத்திற்கு முக்கியமான நீர்வழிப்பாதையில் “பிராந்திய அதிகாரிகளால்” ஒரு கப்பல் கைப்பற்றப்பட்டதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) கூறியது.

நவம்பர் பிற்பகுதியில் இந்தியப் பெருங்கடலில் மற்றொரு இஸ்ரேலிய கொள்கலன் கப்பல் ஆளில்லா விமான தாக்குதலில் தாக்கி சேதப்படுத்தப்பட்டது, இந்த தாக்குதலை ஈரான்நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரான்!

Quick Share

ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 50 ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரத்திற்கு பின்னர் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈராக் வான் வெளியில், ட்ரோன்களின் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஜோர்தான், ஈரான் மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் ராணுவமும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தொடுக்கும் நேரடி தாக்குதல் இதுவென்றே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 50 ட்ரோன்கள் என கணக்கிடபப்ட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ட்ரோனும் சுமார் 20 கிலோ அளவுக்கு குண்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.

ஆனால், இஸ்ரேல் எல்லையில் அத்துமீறும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




You cannot copy content of this Website