உலகம்

அமெரிக்க கனவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் : ” ட்ரம்ப் எச்சரிக்கையால் 145...

Quick Share

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 145 இந்தியர்கள் அமெரிக்க அரசு தனி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு திரும்பச் செல்ல முடியாத ஆவணங்கள் அளிக்கப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர் .அவர்கள்  இன்று காலை டெல்லியை வந்தடைந்தனர் .

அமெரிக்காவிற்கு சென்று கைநிறைய சம்பாதிக்க வேண்டுமென ஆசை பட்டு உரிய தகுதிகள் இல்லாமல் சிலர் சட்ட விரோத செயல்களை பின்பற்றுகின்றனர் .சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய மேக்ஸிகோ எல்லையை பலர் பயன்படுத்துகின்றனர்.மெக்ஸிகோ நாட்டின் வழியாக அமெரிக்காவிற்கு வருபவர்களை தடுக்க அமெரிக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. இதுபோன்று வருபவர்களை தடுக்காவிட்டால் மெக்ஸிகோ மீது கடும் வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார் . இதனால் மெக்சிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 311 பேரை கடந்த 18 ம் தேதி  இந்தியவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஏற்கனவே கடந்த 23ம் தேதி அன்று 117 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் , இன்று 145 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் இவர்களில் வங்கதேசம் மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள்  இருந்ததாகவும் ,வந்தவர்களில் பெரும்பாலானோர் 20முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  
சர்வதேச ஏஜெண்டுகள் மூலம் ரூ .10முதல் ரூ .15 லட்சம் வரை கொடுத்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடியேறியதாக நாடு கடத்தப்பட்டோர் தெரிவித்துள்ளனர்

11 ஆண்டுகளில் சுரண்டப்பட்ட பிரேசில் மழைக்காடுகளின் நிலை இன்று அழிவின் விளிம்பில்.

Quick Share

பிரேசிலில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ அதிபரான பிறகு சூழலியலில் அதிகமாக கவனம் செலுத்தியவர்.
அவர் பதவிக்கு வந்த உடனேயே வன கொள்கையை வேளாண் அமைச்சகத்தின்கீழ் கொண்டுவந்து அமேசான் அழிக்கப்படுவதை தவிர்க்கும் தொடக்கப்புள்ளியை வைத்துள்ளார்.

உலகின் நுரையீரல் என போற்றப்படும் அமேசான் காடுகளை தேவைக்கேற்ப கணிசமான முறையில் உபயோகிக்கலாம் என்றார். இதனடிப்படையில் கடந்த 11 வருடத்தில் பிரேசில் நாட்டில் மழைக்காடுகலின் அழிவு உச்சத்தை எட்டியுள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பிரேசில் நாட்டில் 9 மாகாணத்தில் நடைபெற்ற காட்டழிப்புகளின் பட்டியலும் இதில் அடங்கும்.

இந்த நிலை தொடர்ந்தாள் காடுகளின் அடர்த்தி குறைந்து காலநிலை மாற்றம், பருவ மழை குறைவு, சுற்று சூழல் பாதிப்பு என பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். அது மட்டுமில்லாமல் 40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் அனைத்தின் அழிவிற்கும் நாமே காரணமாகிவிடுவோம்.

ஆண்களுக்கான கருத்தடை ஊசி கண்டுபிடிப்பு – உலகில் முதன்முறையாக இந்தியாவில்!!

Quick Share

உலகிலேயே முதன்முறையாக ஆண்களுக்கான கருத்தடை ஊசி போடும் மருத்துவ பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவால் கண்டுபிடிக்க பட்ட இந்த கருத்தடை ஊசி எந்தவித பக்கவிளைவும் இன்றி 13 ஆண்டுகள் பயன் தரவல்லது. இது அறுவைசிகிச்சை எனப்படும் வாசக்டமி முறைக்கு மாற்றாக கண்டுபிடிக்க பட்டுள்ளது மூன்று கட்டங்களாக சுமார் 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 97.3% வெற்றிகரமாக முடிவு கிடைத்துள்ளது. இந்த கருத்தடை ஊசி ஆண்களுக்கான பாதுகாப்பான முறை என தைரியமாக அழைக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

ஆண் கருத்தடை சாதனம் குறித்த ஆராய்ச்சியை அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது ஆனால் அது ஆரம்ப நிலையிலேயே உள்ளது . இதேபோன்று பிரிட்டனில் உருவாக்கிய சாதனத்தில் பக்க விளைவு ஏற்பட்டு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website