உலகம்

ஜப்பான் பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு !! உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள, 3.3 மில்ல...

Quick Share

ஜப்பானில் பாலியல் வழக்கில் சிக்கிய 53 வயதான தொலைக்காட்சி நிருபருக்கு டோக்கியோ நீதிமன்றம் 3.3 மில்லியன் ஜப்பானிய யென் அபராதம் அளித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

டோக்கியோ நகரில் பெண் செய்தியாளராக பணிபுரிந்த, ஷியோரி இட்டோ என்பவர் டோக்கியோ நீதிமன்றத்தில் ஒரு பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார். அதாவது, ஜப்பான் ஒலிபரப்பு துறையில் உள்ள முக்கிய நபரான நோரியுகி யமாகுச்சி என்பவர் கடந்த 2015 ம் ஆண்டு தன்னை ஒரு விருந்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்பதுதான் அந்த குற்றசாட்டு. அந்த குற்றச்சாட்டால் டோக்கியோவே பரபரப்பானது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெண் செய்தியாளருக்கு சாதகமாக அதிரடி தீர்ப்பை வழங்கினார். டோக்கியோ மாவட்ட நீதிபதி ,,53 வயதான யமாகுச்சிக்கு 30 ஆயிரம் டாலரை அதாவது 3.3 மில்லியன் ஜப்பானிய YEN அபராதமாக விதித்தார். இந்த தீர்ப்பு ஜப்பான் பாலியல் வழக்கில் மிகவும் முக்கியமான தீர்ப்பாக விளங்குகிறது. இது குறித்து பேட்டியளித்த பெண் செய்தியாளர் ஷியோரி இட்டோ, எனக்கு சத்தமாக வந்துள்ள தீர்ப்பு எனக்கு மிகவும் வியப்பை தருகிறது ,இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் .எனக்கு நடந்த இந்த சம்பவத்தை புகார் அளித்தபோது அந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது என விளக்கமளிக்க சொன்னது எனக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது என தெரிவித்தார்.

#CAA-க்கு எதிர்ப்பு: மாணவர் விசாவிற்கு எதிரானது, இந்தியாவை விட்டு உடனே வெளியேறு; ஜெர்மன...

Quick Share

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியதற்காக, இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்ட ஜெர்மனி மாணவன்.

மத்திய அரசால் நிறைவேற்ற பட்ட குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராடிவரும் நிலையில், சென்னையில் ஐ.ஐ.டியில் இயற்பியல் முதுகலை படிப்பு கற்று வருகிறார் ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் என்ற மாணவர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதில் அவர் ” we have been there,1933-1945″ என எழுதப்பட்ட பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை அப்போதைய ஹிட்லர் தலைமையிலான ஆட்சியோடு மறைமுகமாக ஒப்பிட்டதாக கூறப்படுகிறது. அது குறித்த விசாரணையில், அவர் இந்தியாவில் தங்கி படிப்பதற்கான அனுமதியை ரத்து செய்து மீண்டும் அவர் ஜெர்மனிக்கே செல்ல உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ஜேக்கப் தெரிவித்த போது, குடியுரிமை அதிகாரிகள் என்னை அழைத்து ஏன் போராட்டத்தில் கலந்து கொண்டீர்கள் என விசாரணை நடத்தினர். மேலும் மாணவர் விசாவில் வந்து படிக்கும் நான், படிக்க மட்டுமே இங்கு அனுமதி உள்ளது என்றும் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர்கள் கூறிய பிறகு தான் எனக்கு தெரியவந்தது, சென்னையில் குடியுரிமைக்கு எதிரான போராட்டம் அனுமதியில்லாமல் நடைபெற்று வருகிறது என்று, மாணவர் வீசாவில் வந்த நான் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது குற்றம் என்றும் தெரியவந்தது. அதனால் அவர்கள் என்னை இந்தியாவில் இருந்து வெளியேற சொன்னார்கள். அது தொடர்பாக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர் என தெரிவித்தார். இதனால் அவர் பாதி படிப்பை ஜெர்மனி சென்று தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரவை ஏற்று மாணவர் பெங்களூருவிற்கு சென்று அங்கிருந்து நேற்று ஜெர்மனிக்கு திரும்பினார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோவில் 175 குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த 34 பாதிரியார்கள் !!

Quick Share

மெக்சிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக் சர்ச்சில் 175 குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 34 பாதிரியார்கள், வெளியான அதிர்ச்சி தகவல்.

வடஅமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நகரில் ரோமன் கத்தோலிக்க சர்ச் ஒன்றில் இருந்த பாதிரியார்களால் 1941ம் ஆண்டில் இருந்து பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக எழுந்த புகாரால், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், குறைந்தது 175 குழந்தைகள் பாதிரியார்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக திருகிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த சர்சையில் சிக்கிய மார்சியல் மேசியல் என்ற பாதிரியார் மட்டும் சுமார் 60 குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை தவிர மேலும் 33 பாதிரியார்களும் இந்த கேவலமான கொடூர செயலில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்துள்ளது.

பல ஆண்டுகளாக இதுபோல பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பாதிரியார் மார்சியல் மேசியலை , கடந்த 2006ம் ஆண்டு போப் 16ம் பெனிடிக், பணியில் இருந்து ஓய்வு பெறுமாறு உத்தரவிட்டார். ஆனால் குற்றசாட்டுகளை எதிர்கொள்ளாமலேயே அவர் கடந்த 2008ம் ஆண்டு இறந்துள்ளார் என சனிக்கிழமை வெளியான விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 33 பாதிரியர்களில் 6 பேர் இறந்துவிட்டனர், 8 பேர் துறவறத்தை விட்டு வெளியே சென்றுவிட்டனர் மேலும் ஒருவர் சபையை விட்டு வெளியேறினார். 18 பாதிரியார்கள் முக்கிய பொது பணியில் இருக்கும் பொறுப்பில் இருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளனர்.

காபிய கொட்டுனதுக்கு ரூ.7 லட்சம் அபாரதமா ? ஐரோப்பிய விமான நிறுவனத்துக்கு வந்த சோதனை !!

Quick Share

விமானத்தில் பயணித்த சிறுமி மீது காபி கொட்டியதால், ரூ. 7லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஐரோப்பா விமான நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.

ஸ்பெயின் நாட்டின் மல்லோர்காவில் நகரில் இருந்து, தனது அப்பாவுடன் ஆறுவயது சிறுமி ஒருவர், ஆஸ்திரியாவின் வியன்னாவுக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது சிறுமி விமானத்தில் காபி கேட்டுள்ளார். காபியை சிறுமிக்கு வழங்கும் போது எதிர்பாராத விதமாக சிறுமியின் தொடையின் மீது கொட்டியது. இதனால் சிறுமியின் தொடை பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விஷயத்தை லேசாக விடாத சிறுமியின் தந்தை ஐரோப்பிய நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்தார். ஃபார்முலா 1 டிரைவர் நிகி லாடாவால் நிறுவப்பட்ட சமீபத்தில் திவாலான ஆஸ்திரிய கேரியரான நிகி என்ற ஐரோப்பிய விமான நிறுவனத்தின் மீது அந்த வழக்கு போடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அந்த விமான நிறுவனம் பொறுப்பேற்காது, விமான அதிர்வினால் தவறுதலாக கூட கொட்டி இருக்கலாம் என நீதிமன்றத்தில் வாதாடியது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இறுதியில் பயணிகளுக்கு தங்கள் சேவையை செய்யும் போது எந்த பிரச்சனை நேர்ந்தாலும் அதற்கு முழு பொறுப்பையும் அந்த விமான நிறுவனம் தான் பொறுப்பேற்கவேண்டும் என தீர்ப்பளித்தது. மேலும் அந்த விமான நிறுவனம் ரூ.7 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வாங்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேயர் பதவியில் 7 மாத குழந்தை !! அமெரிக்காவில் நடந்த அதிசயம்.

Quick Share

அமெரிக்க நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வொயிட் ஹால் என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு வருடமும் அந்த நகரின் கௌரவ மேயர் பதவி ஏலத்தில் விடப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் அந்த நகரின் மேயராக அறிவிக்கப்படுவார். அதில் வரும் நிதியை தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு பிரித்து கொடுப்பது வழக்கம்.

இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் நிதி திரட்டுவதற்க்கான மேயர் பதவி ஏலத்தில் விடப்பட்டது, இதில் பங்கு கொண்டு “வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் ” என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இதில் அதிசயம் என்னவென்றால் அவர் 7 மாத குழந்தை. இவருக்கான பதவிஏற்பு விழாவும் நடைபெற்றது அதில் சுமார் 150 பேர் கலந்துகொண்டு 7 மாத மேயரை விமர்சையாக கொண்டாடினர்.

இந்த நிகழ்வு அன்பின் வெளிப்பாடாக நடத்தப்பட்டது. சார்லி-யின் வளர்ப்பு தாய் நான்சி இந்த நிகழ்வில் “அமெரிக்கா எல்லாருக்கும் பொதுவானது, மேலும் அமெரிக்காவை அன்பான நடக்குவோம்” என்ற செய்தியை உரக்க சொன்னார். எந்த கட்சிக்கும் சார்பில்லாமல் அனைவரும் ஒன்றாக அன்பு காட்ட வேண்டும் என்று கூறினார்.

20 பேர் துடிதுடித்து பலி !! கோர விபத்தால் ரத்த வெள்ளத்தில் சாலை!!

Quick Share

கவுதமாலா நாட்டில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கர விபத்தால் 20 பேர் துடிதுடிக்க உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கவுதமாலா நாட்டின் வடகிழக்கு பகுதியான பீட்டன் நகரில் இருந்து ஒரு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைநகரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அதேவழியில் ஒரு லாரியும் பேருந்தின் பின்னால் வந்துகொண்டு இருந்துள்ளது. இந்நிலையில் கவுலான் எனும் இடத்தில் பேருந்து வரும் போது வளைவு ஒன்று வரவே அதில் ஓட்டுநர் திரும்பியுள்ளார், அந்த நேரம் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மிகவும் வேகமாக வந்து பேருந்திமீது பயங்கரமாக மோதியுள்ளது. கண் முடி திறப்பதற்குள் என்ன நடந்தது என்றே தெரியாத அளவிற்கு பயங்கர சத்தத்துடன் அந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது. இந்த பாயங்கர விபத்தில் சிக்கி 20 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அந்த சாலையே ரத்த வெள்ளத்தில் காட்சியளித்தது.

இதில் பெரும் சோகம் என்ன வென்றால் விபத்தில் பலியான 20 பேரில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் 9 பேர் ஆகும். இந்த விபத்தின் தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அமெரிக்காவில் தமிழக விஞ்ஞானி”, தேசிய அறிவியல் மைய தலைவரானார் சேதுராமன் பஞ்...

Quick Share

அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் அறிவியல், பொறியியல் போன்ற துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வளர்க்கும் விதமாக தேசிய அறிவியல் மையம் அரசு சார்பில் செயல்படுகிறது. இதன் தலைவராக இருந்த பிரான்ஸ் கோர்டோவாவின் பதவிக்காலம் முடிவடையாதல், 2020ம் ஆண்டுக்கான புது தலைவராக தமிழகத்தில் பிறந்த இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சேதுராமன் பஞ்சநாதனை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.

சேதுராமன் பஞ்சநாதனைபற்றி பேசிய அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டத்துறை இயக்குனர்
கெல்வின் ட்ராக்மியா கூறியதாவது; சேதுராமனை தேசிய அறிவியல் மையத்தில் தலைவராக தேர்தெடுக்க காரணம், அவர் ஆராய்ச்சி, நிர்வாக மேலாண்மை, கொள்கைகளை வகுத்தல் ஆகிய அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியவர். தனது முழு பங்களிப்பையும் அளித்தவர் என்பதால்தான். அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் அமேரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிப்பதை சேதுராமன் கட்டாயம் உறுதி செய்வார் என அதிபர் டிரம்பும் நம்பிக்கை தெரிவித்தார் என பேசினார். தமிழகத்தை சேர்ந்த சேதுராமன் சென்னை பல்கலை கழகத்தில் தனது இயற்பியல் பட்டப்படிப்பை முடித்து, பின்னர் பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் (IISC) பொறியியல் பயின்றார். 1997ம் ஆண்டு அமெரிக்க சென்று பேராசிரியராக பணியை தொடர்ந்தார். அங்கேயே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பல பதவிகளை வகுத்தார். அவர் தற்போது, அரிசோனா பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“சோதனை மேல் சோதனை”, சிறை செல்ல துணிந்த முதியவர் இதற்காக தானாம் !!! என்ன ஒ...

Quick Share

வேலையில்லாத காரணத்தாலும், தங்குவதற்கே வழியில்லாததாலும் சிறைக்கு செல்ல துணிந்த முதியவரின் செயல் ஜெர்மனி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டின் மோனோசென்க்ளாட்பாக் எனும் நகரை சேர்ந்த 62 வயது முதியவர் எபெர்ஹார்டு. இவர் கணினி ஆய்வாளராக இருந்தவர், சில மாதங்களுக்கு முன் தான் இவரது தனது வேலையை இழந்துள்ளார். பின்னர், தன்னுடைய சேமிப்பில் இருந்த பணத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றதன் மூலம் செலவழித்துள்ளார். வேலையும் இல்லாமல், சேமிப்புப்பணத்தையும் இழந்த இவர் தனது காரையே வீடாக பயன்படுத்தி வாழ்ந்துள்ளார். கடைசியில் வைத்திருந்த காரின் ஓட்டுநர் உரிமமும் காலாவதியாகிவிட்டது. இந்த நிலையில், விரக்தி அடைந்த இவர், கடந்த ஜூன் மாதம் காரை ஓட்டிச்சென்ற அவர் சைக்கிள்கள் செல்லும் பாதையில் சென்று சைக்கிளில் வந்த ஒரு நபரை வேகமாக காரால் மோதியுள்ளார். இதில் சைக்கிளில் வந்த நபர் பலத்த காயமடைந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் எபெர்ஹார்டுவை கைது செய்தனர்.

இவ்வழக்கில் அவருக்கு நீதிபதிகள் ஆயுள்தண்டனையை அளித்துள்ளனர். நீதிபதிகள் அளித்த தண்டனை உத்தரவில் “வேலை இல்லாததாலும், தங்குவதற்கும் இடமில்லாததாலும் எபர்ஹார்டு கடும் துயரத்தில் இருந்ததால் தவறு செய்து விட்டு சிறைக்கு சென்றால் அங்கு உணவு, உடை, இடம் எல்லாம் கிடைக்கும் என எண்ணி அதற்காக தான், சைக்கிளில் செல்லும் பாதையில் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்தார். இதை கேட்ட ஜெர்மனி மக்கள் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சூரிய ஒளியின் சக்தி மூலம் பாட்டு கேக்கலாம் !! ஆம்., புதிய ஹெட்ஃபோன் அறிமுகபடுத்தும் JBL...

Quick Share

சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கக்கூடிய புதிய ஹெட்ஃபோனை பிரபல ஜே.பி.எல் நிறுவனம் தற்போது அறிமுகபடுத்தியுள்ளது.

இந்த சோலார் ஹெட்போன் சுவீடன் நாட்டை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவனமான கிறீன் டெக் நிறுவனத்தின் “”எக்ஸிகார் பவர்ஃபோயில்” என்ற தொழில்நுட்பத்தால் இந்த ஹெட்ஃபோன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது உபயோகிக்க கூடிய பேட்டரி ஹெட்ஃபோன்களை விட அதிக நன்மைகள் உள்ளன. இதில் உள்ள அடாப்டர்கள் மூலம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்துகொள்ளும். இதில் சுயமாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளதால் நீண்ட நேரம் உபயோகிக்கலாம். மேலும் உள்பக்கமும் வெளிப்பக்கமும் சார்ஜ் செய்யும் பகுதி இருப்பதால் இரைச்சல் இல்லாமல் ஆடியோவை கேட்கலாம். மிகவும் குறைவான எடை உள்ளதால் எளிதாக பயன்படுத்தலாம். பேட்டரி இல்லாததால் ஆயுள் முழுவதும் உபயோகிக்கலாம். இதில் இயற்கையான மற்றும் செயற்க்கையான ஒளிகள் உள்ளன. இந்த ஹெட் போன்கள் தற்போது பச்சை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இது வாட்டர் ப்ரூப் வசதியும் உள்ளது. இதில் உள்ள 40மில்லி மீட்டர் டிரைவர்கள் 20kHz – 20kHz அளவிலான வரம்பிற்குள் சிறந்த ஒளியை கேட்க முடியும். ஆடியோவை கேக்கும் போது வெளிப்புறத்துடன் தொடர்பில் உள்ளவாறு இருக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் கருவிகளையும் இணைத்துக்கொள்ளலாம். மேலும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் அல்லது அமேசான் அலெஃசாவை பயன்படுத்தி வாய்மொழியாக பேசி பயன்படுத்தலாம். இதில் உள்ள பட்டன்கள் மூலம் ஹேண்ட்ஸ் -ஃபிரீ (handsfree)அழைப்புகளையும் பேசலாம்.
இந்த JBL ஹெட்செட்டின் விலை ரூ.7,019.

“நச்” ன்னு போட்ட ஒரு ட்விட்!! இசைப்புயலை திரும்பிப்பார்த்த நெட்டிசன்கள் !! ...

Quick Share

ஏ.ஆர்.ரகுமான் தற்போது தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரது முழு பெயர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தனது அதிரடியான இசையால் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் போன்ற பல விருதுகளை வாங்கி குவித்துள்ளவர். தற்போதும் பிஸியான இசையமைப்பாளராக ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என கலக்கி வருகிறார். இந்தியாவில் நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு தனக்கென உரிய தனி பாணியில் தனது கருத்தை தெரிவித்து வருகிறார். அடிக்கடி கருத்து தெரிவிக்காமல் முக்கிய பிரச்சனைகளுக்கு எப்போதாவது கருத்து தெரிவித்தாலும் தெரிவிக்கும் கருத்தை நச் -என்று தெரிவிப்பார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றது. இதில் மாணவர்களும், இளைஞர்களும், பல பிரபலங்களும் கூட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது விமான பயணம் குறித்த ஒரு விஷயத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் செல்லக்கூடிய பயணத்தின் பதிவு ஆகும். ஒரு புகைப்பட பதிவான இதில் ரகுமான் தனது பெயர் மட்டும் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் ஏ.ஆர்.ரகுமான் என குறிப்பிடும் அவர் அதில் அவரது முழு பெயரான “அல்லா ரக்கா ரஹ்மான் ” என பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதாவது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ரகுமான் இதம் மூலம் ஆதரவு அளித்துள்ளார். நேரடியாக பேசாமல் மறைமுகமாக தாக்கியுள்ளார் எனவும் பலர் கூறுகின்றனர். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துகள் சமமாக வந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே எ.ஆர்.ரகுமான் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது “தமிழா தமிழா நாளை நம் நாடே” என்ற பாடலை வெளியிட்டு போராட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவை தெரிவித்தார் ,மற்றும் இந்தி திணிப்பு போராட்டத்திற்கும் ட்விட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தற்போது பதிவிட்டுள்ள “அல்லா ரக்கா ரஹ்மான்” என்ற பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அடேங்கப்பா, 8 வயதில் ரூ.158 கோடி சம்பாதித்த சிறுவன் !! YOUTUBE விடியோவால் அடித்த “...

Quick Share

நடப்பு ஆண்டில் யூ டியூப் சேனல் மூலம் ரூ.158 கோடி வருமானத்தை ஈட்டியுள்ள 8 வயது சிறுவன் சர்வதேச அளவில் முதலிடத்தை தக்கவைத்து, போர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பிடித்துள்ளார்.

ஆரம்பத்தில், ரியான் காஜி என்ற சிறுவனின் பெற்றோரால் 2015ம் ஆண்டு “ரியான்ஸ் டாய்ஸ் ரிவியூ” என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த சேனல் “ரியான்ஸ் வேல்டு” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய பொம்மைகளை அறிமுகம் செய்து ரியான் விளையாடும் வீடியோக்களை அவரது பெற்றோர் பதிவிட்டு வந்தனர். தொடங்கப்பட்டபோது வெறும் 22.9 சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்த இந்த சேனல், நடுவில் சில வீடியோக்கள் 100 கோடி பார்வையாளர்களை தாண்டி சென்றது. மேலும் தற்போது அந்த சேனலுக்கு 2 கொடியே 29 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வீடியோவில் அறிமுகப்படுத்தப்படும் பொம்மைகளுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்யத்தக்க கூறி பணத்தை கொடுத்துள்ளது. ஆனால் வீடியோவில் அதற்கான தகவல் சரியாக குறிப்பிடாததால், நுகர்வோர் அமைப்பான “ட்ரூத் இன் அட்வர்டைசிங்”, அமெரிக்காவின் பெடரல் டிரேட் கமிஷனுக்கு புகார் அளிக்கவே, இந்த சேனலின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டு “ரியான் ஏஜஸ்” என வைக்கப்பட்டு தற்போது உயர்கல்விக்கான வீடியோக்களை வழங்குகிறது.

2018-2019 வரையிலான ஆண்டில் 8 வயதான ரியான் யூ டியூப் மூலமாக 22 மில்லயன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.158 கோடி சம்பாதித்து சர்வதேச அளவில் முதலிடத்தை தக்கவைத்து இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. மேலும் டியூட் பெர்பெக்ட் என்ற யூடியூப் சேனல் 20 மில்லயன் டாலர் வருமானத்தில் 2வது இடத்தையும், ரஷ்யாவை சேர்ந்த 5 வயது சிறுமியின் சேனல் 18 மில்லியன் டாலருடன் 3வது இடத்தையும் பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிரடி திருப்பங்களுடன் அமெரிக்கா!! ட்ரம்பின் பதவி நீக்க தீர்மானம் வெற்றி, அடுத்தது என்ன ?

Quick Share

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது, அடுத்து செனட் சபையை நோக்கி விசாரணை தொடரும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலிலும் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட போகும் ஜனநாயக கட்சியின் ஜோ பிடனுக்கு எதிரான ஊழல் வழக்குகளின் மீதான விசாரணையை தீவிரப்படுத்திதுமாறு அவர் கூறியுள்ளார். இதனால் அவர் ஜோ பிடனுக்கு எதிராக சாதி செய்ய உக்ரைன் அரசிடம் பேரம் பேசியுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது ,இதுதான் பதவி நீக்கத்திற்கான முதல் குற்றசாட்டு ,பின்னர் அதற்கும் மேலாக பல குற்ற சாட்டுகள் அவர் மீது வந்திருக்கின்றன. அதிபர் ட்ரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து, மோசடி செய்து அதிபர் ஆனார் என்றும் சட்டங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் என்றும், அதேபோல சில ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய ஊதிய விதிகளை மீறுகிறார், மேலும் வெளிநாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவதாக கூறி பதற்றம் ஏற்படுத்துகிறார் என அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்படைக்கப்பட்ட்டது. அந்த சபையில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெருன்பான்மை இருப்பதால், இந்த தீர்மானத்திற்கு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துவந்தார். அதன் பின் அமெரிக்க பிரதிநிதிகள் சபை அந்த தீர்மானத்தை விசாரித்தது. அந்த விசாரணை இன்று முடிவடைந்தது. ஜனநாயக கட்சிக்கு அந்த சபையில் 233 உறுப்பினர்கள் உள்ளனர். ட்ரம்பிற்கு ஆதரவாக 197 உறுப்பினர்களே இருந்தனர் . இதில் பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக 227 பேர் வாக்களித்தனர், எதிராக 179 பேர் வாக்களித்தனர். இதனால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அடுத்தகட்டமாக, அவர் மீதான விசாரணை செனட் சபையில் விசாரிக்கப்பட்டு, அந்த வாக்கெடுப்பில் இவர் வெற்றி பெற்றால் தான் அதிபராக நீடிக்க முடியும். அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாக செனட் சபையில் 53 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியில் 47 உறுப்பினர்கள் தான் உள்ளனர். அங்கு ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட 66 உறுப்பினர்கள் பலம் தேவை படுகிறது. அதனால் அங்கு அதிபர் பதவி நீக்கம் செய்ய படுவது சந்தேகம் தான் .சென்ட் சபையில் அவர் காப்பாற்ற பட வாய்ப்புள்ளது. இது நடக்கவில்லை என்றால், மொத்தமாக அவர் பதவியை இழக்க நேரிடும் .

அமெரிக்காவில் இதுவரை 2 அதிபர்கள் மட்டுமே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பில் கிளிண்டன், ஆண்ட்ரு ஜான்சன் ஆகியோர் 1998 ம் ஆண்டு பிரதிநிதிகள் சபை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செனட் சபை மூலம் இதுவரை யாரும் பதவி நீக்கம் செய்ய படவில்லை. ட்ரம்ப் அதுபோன்ற நிலையை தற்போது எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய அதிபர் ட்ரம்ப் எதிர்க்கட்சிகள் எனக்கெதிராக ஜனநாயக துஸ்பிரயோகம் செய்கின்றனர். அடுத்து நடக்கும் அதிபர் தேர்தலில் என்னை வெற்றிபெற செய்ய வேண்டுமென தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்.




You cannot copy content of this Website