உலகம்

பிரேசில் விமான விபத்தில் 62 பேர் உயிரிழப்பு..

Quick Share

பயணிகள் விமானம் ஒன்று பிரேசிலில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரேசிலின் சாவ் பாலோவில் (Sao Paulo) பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. விபத்தின் போது விமானத்தில் 58 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 62 பேரும் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

TV GloboNews ஒளிபரப்பிய காட்சிகளில், விமானத்தின் பெரும் பகுதியில் தீ பற்றி எரிவதையும், விமானத்தின் உட்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதையும் பார்க்க முடிகிறது.

உள்ளூர் தீயணைப்பு படையினர், விமானம் Vinhedo நகரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த ATR-72 விமானமானது பரானா மாகாணத்தில் உள்ள Cascavel-விலிருந்து சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான Guarulhos நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளது.

விண்வெளி குப்பையாக மாறிய சீன ராக்கெட்: 300 துண்டுகளாக வெடித்து சிதறல்!

Quick Share

சீன ராக்கெட் 300 துண்டுகளாக சிதறி விண்வெளி குப்பையாக மாறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான செயற்கைக்கோள் தொகுப்பு

சீனாவின் மிகப்பெரிய இணைய சேவைக்கான திட்டமான 18 Qianfan செயற்கைகோள் தொகுப்பை ஏவிய லாங் மார்ச் 6ஏ ராக்கெட் வெடித்து சிதறியதில் 300-க்கும் அதிகமான விண்வெளி குப்பைகள் உருவாகியுள்ளது என்று அமெரிக்காவின் விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான (USSPACECOM) தெரிவித்துள்ளது.

 தொகுப்பின் முதல் பகுதியான இந்த 18 செயற்கைக்கோள்களின் நோக்கம் சீனாவின் சொந்த பதிப்பான “எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்கை” நிறுவவதாகும். இது Qianfan பிராட்பேண்ட் நெட்வொர்க் என்று அழைக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள Taiyuan  செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 6ஏ ராக்கெட்(Long March 6A rocket ) ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள்கள் ஷாங்காயில் உள்ள Chinese Academy of Sciences’ Innovation Academy for Microsatellites-யால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Long March 6A ராக்கெட் விண்வெளியில் வெடித்து சிதறி 300க்கும் மேற்பட்ட குப்பைகளாக மாறியுள்ள நிலையில், அவை பூமியின் சுற்றுப்பாதையில் இருப்பதை கண்காணிக்க முடியும் என்று  USSPACECOM தெரிவித்துள்ளது.

345 பேர்களுக்கு மரணதண்டனை : ஈரான் தொடர்பில் வெளிவரும் நடுங்கவைக்கும் தகவல்

Quick Share

கடந்த 7 மாதங்களில் மட்டும் 345 பேர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஈரான் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு நாட்களில் 29 பேர்களுக்கு

நார்வேயில் இருந்து செயல்படும் ஈரான் மனித உரிமைகள் குழு புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 29 பேர்களுக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது என்றும், ஒரே சிறையில் 26 பேர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் Volker Turk தெரிவிக்கையில், இந்த விவகாரம் மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், மிகக் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

வெளியான தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 15 பெண்கள் உட்பட 345 பேர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் முதன்மையாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அல்லது கொலைக் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, இந்த ஆண்டு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயமான விசாரணை

மேலும், வேண்டுமென்றே கொலை செய்வதில் ஈடுபடாத குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் தரநிலைகளுக்கு முரணானது என ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் செய்தித்தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, இந்த வழக்குகளில் பலவற்றில் உரிய செயல்முறை மற்றும் நியாயமான விசாரணை இல்லாதது குறித்தும் கவலைகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கைதியின் குடும்பத்தினருக்கோ அல்லது சட்ட ஆலோசகருக்கோ தெரிவிக்கப்படாமல் பல மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்த ஈரான் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மரண தண்டனையை பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் பலமுறை குற்றம் சாட்டி வருகின்றன. 

மட்டுமின்றி, சீனாவைத் தவிர வேறு எந்த நாட்டையும் விட ஈரானில் ஆண்டுதோறும் அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்...

Quick Share

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கியூஷு மற்றும் ஷிகோகு ஆகிய மேற்கு தீவுகளின் பசிபிக் கடற்கரையில் கடல் மட்டம் ஒரு மீட்டர் உயரும் அபாயம் இருப்பதாக ஜப்பான் அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் மியாசாகியின் நேரப்படி மாலை 4:42 மணியளவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் நில நடுக்கத்திலிருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிஷிமா மற்றும் 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கனோயா உள்ளிட்ட நகரங்கள் பலமான நில நடுக்கத்தை உணர்ந்துள்ளன.     

மேலும் நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கையில் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பயணியின் தலையில் பேன்., அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.!

Quick Share

பயணி ஒருவரின் தலைமுடியில் பேன் ஊர்ந்து செல்வதைக் கண்டு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பயணி ஒருவர் டிக்டோக்கில் பகிர்ந்த வீடியோ வைரலானது.

பொதுவாக, ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், பயணிகளில் யாருக்கேனும் அவசர மருத்துவ உதவி, வெடிகுண்டு மிரட்டல்கள், வானிலை ஒத்துழைக்காமல் இருந்தால், விமானம் அவசரமாக தரையிறங்குவதை (Emergency Landing) பார்க்கலாம்.

ஆனால், இங்கு ஒரு பெண் பயணியின் தலையில் பேன் ஊர்ந்து செல்வது (Lice In Womans Hair) விமானத்தை அவசரமாக தரையிறக்கச் செய்துள்ளது. இந்த சம்பவம் ஜூன் மாதம் நடந்துள்ளது, ஆனால் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்தது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நியூயார்க் சென்றுகொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ​​ஒரு பெண்ணின் தலையில் பேன் ஊர்ந்து செல்வதைக் கண்ட சக பயணிகள், விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். விமானம் பீனிக்ஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஈதன் ஜூடெல்சன் என்ற பயணி தனது அனுபவத்தை TikTok பகிர்ந்துள்ளார்.

அதில், ‘விமானம் திருப்பி விடப்படுவதாக மட்டுமே விமான ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், நான் சுற்றி பார்த்தேன். யாருக்கும் பயமில்லை. எந்த பதற்றமும் காணப்படவில்லை. ஆனால் விமானம் தரையிறங்கியது.

உடனே ஒரு பெண் விமானத்தின் முன்புறம் விரைந்தார். அதன்பிறகு, விமானத்தை அவசரமாக தரையிறக்கியது ஏன் என்று சக பயணியிடம் கேட்டபோது உண்மை தெரிந்தது.,’ என்று அவர் விளக்கினார்.

இந்த சம்பவத்தால் விமானம் 12 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அதுவரை பயணிகள் ஓய்வெடுக்க ஹோட்டல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் வந்தடைந்த F-16 போர் விமானங்கள்: ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சி!

Quick Share

உக்ரைன் F-16 போர் விமானங்களை பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உக்ரைன் விமானிகள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு F-16 போர் விமானங்களை நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

F-16 போர் விமானங்கள் முழுக்க முழுக்க அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட போர் விமானமாகும், உக்ரைனால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த போர் விமானம் கிட்டத்தட்ட ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 29 மாதங்களுக்கு பிறகு வந்தடைந்துள்ளது.

இரண்டு F-16 போர் விமானங்கள் தரையிலும், இரண்டு F-16 போர் விமானங்கள் வானிலும் பறந்து கொண்டிருந்த போது, விமான தளத்தில் நின்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி F-16 போர் விமான பயன்பாடு குறித்து அறிவித்தார்.

மேலும், F-16 போர் விமானங்கள் தற்போது உக்ரைனில் உள்ளது, இந்த ஜெட் விமானங்களில் தேர்ச்சி பெற்ற நமது விமானிகள் ஏற்கனவே நமது நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பதில் பெருமையடைகிறேன் என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, விமான தளம், எத்தனை விமானங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்கள் தெளிவாக வழங்கப்படவில்லை.

திடீரென அமேசான் காட்டைவிட்டு கூட்டமாக வெளியே வந்த ஆதிவாசிகள்: பின்னணியில் அதிரவைக்கும் ...

Quick Share

சமீபத்தில், அமேசான் காட்டின் உள்பகுதியில் வாழும், அதிகம் வெளியில் தலைகாட்டாத ஆதிவாசிகள் கூட்டத்தைச் சேர்ந்த சிலர், திடீரென காட்டைவிட்டு வெளியில் வந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. உண்மையில், அந்தக் காட்சிகள் அதிரவைக்கும் ஒரு உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளன. அமேசான் காடுகளில், உள் பகுதியில் வாழ்ந்துவரும் ஆதிவாசிகள் இனம் ஒன்று Mashco Piro என அழைக்கப்படுகிறது. உண்மையில், அவர்களுடைய இனத்தின் பெயர் Nomole அல்லது Cujareño என்பதாகும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

அவர்கள் பெரு நாட்டையொட்டிய அமேசான் காடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் வெளியாட்களை முற்றிலுமாக தவிர்க்கும் குணம் கொண்டவர்கள்.

ஆனால், சமீபத்தில் அந்த ஆதிவாசிகளில் சுமார் 50 பேர் Las Piedras என்னும் நதியோரமாக கூட்டமாக வந்து நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இப்படி வெளியே தலையே காட்டாத ஒரு ஆதிவாசி கூட்டம் ஏன் இப்படி திடீரென வெளியே வந்தது என்று கேட்டால், அது பயங்கரமான ஒரு விடயம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதாவது, அவர்கள் வெளியே வரவில்லை. மரம் வெட்டுவதற்காக காடுகளை அழிப்போர், மரங்களை வெட்டி வெட்டி, அந்த ஆதிவாசிகளின் வீடுவரை சென்றுவிட்டார்கள் என்பது அதன் பொருள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஆகவேதான், தாங்கள் வாழும் இடத்துக்கே வெளியாட்கள் வந்துவிட்டதால் கோபமடைந்துள்ள அந்த ஆதிவாசிகள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தவே, தங்கள் வழக்கத்துக்கு மாறாக தாங்கள் வாழும் அடர்ந்த காட்டைவிட்டு வெளியே வந்துள்ளார்கள் என்கிறார்கள் அவர்கள்.

ஆகவே, பாதுகாக்கப்படவேண்டிய அந்த பூர்வக்குடியினரை பாதுகாப்பதற்காக, அந்த பகுதிகளில் மரம் வெட்டுவதற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

திருமணம் ஆகாமல் 100 குழந்தைகளுக்கு தந்தையான பிரபலம்!

Quick Share

நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் குழந்தை பெற எனது விந்தணுக்களை தானம் செய்து உதவியுள்ளேன் என திருமணமாகாத டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) தெரிவித்துள்ளமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) அதன் தலைமை அதிகாரியாகவும் உள்ளார்.

ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதாகும் பாவெல் துரோவ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் 12 வெவ்வேறு நாடுகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தையாக தான் உள்ளதாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

15 வருடங்கள் முன்பு தனது நண்பர் ஒருவர் குழந்தையின்மையால் வருத்தத்தில் இருந்த நிலையில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது விந்தணுவை முதல் முறையாக பாவெல் துரோவ் தானம் செய்துள்ளார்.

அதன் பின்னர் தொடர்ந்து தனது விந்தணுக்களை தானம் செய்யத் தொடங்கியுள்ளார். முதல்முறையாக விந்தணுக்களை தயக்கத்துடனேயே தானம் செய்தேன்.

ஆனால் அப்போது மருத்துவர்கள் என்னிடம் தரம் வாய்ந்த விந்தணுக்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால், குழந்தையின்றி வாடும் தம்பதிகளுக்கு உதவும் வகையில் விந்தணு தானம் செய்வது சமூக கடமையாகும் என்று தெரிவித்தனர்.

அந்த காரணம் தான் தொடர்ந்து விந்தணு தானம் செய்யத் எனக்கு தூண்டுதலாக இருந்தது’ என்று பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். இதுவரை 12 நாடுகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் குழந்தை பெற எனது விந்தணுக்களை தானம் செய்து உதவியுள்ளேன்.

இன்னும் வருங்காலங்களில் IVF கிளினிக்கில் உறையவைக்கபட்டு பாதுகாப்பட்டுள்ள எனது விந்தணுக்கள் இன்னும் பல குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக அமையும்’ என்றும் பாவெல் பெருமையுடன் கூறுகிறார்.

அதுமட்டுமல்லாது இதுபோன்று பலரும் தங்களது விந்தணுக்களை தானம் செய்ய வேண்டும் என்றும் டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) கோரிக்கை விடுத்துள்ளார்.

சீன இளம்பெண்கள் தொடங்கிய புதிய வியாபாரம்:கட்டிப்பிடிக்க,முத்தம்கொடுக்க,படம் பார்க்க என ...

Quick Share

சீனாவில் இளம் பெண்கள் வித்தியாசமான வணிக முறையை கையில் எடுத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீன தெருக்களில் புதிய முயற்சி

சீன தெருக்களில் தற்போது புதிய மற்றும் சர்ச்சைக்குரிய புதிய வணிகம் ஒன்று தலைதூக்கியுள்ளது.

தற்போது, சீன தெருக்களில் நீங்கள் நடந்து செல்லும் போது இளம் பெண்கள் விலைப்பட்டியலுடன் அமர்ந்து இருப்பதை பார்க்க முடியும்.

அவர்கள் வழக்கமான சேவைகள் அல்லது பொருட்களை விற்பனை செய்வதற்கு பதிலாக, உறவின் தருணங்களை விலைக்கு வழங்குகின்றனர்.

அதாவது, பொதுவாக உறவுகள் என்பது பொறுப்புணர்வுடன் இருப்பதால், பலர் தங்களுக்கான பிணைப்பில்லாத வெறும் அன்பை மட்டும் பெற விரும்புகின்றனர்.//// இந்த விசித்திரமான போக்கை உணர்ந்து கொண்ட சீன வாசிகள் இதற்கான வணிக சந்தையையும் உருவாகியுள்ளன.

இதன் மூலம் சீனாவில் “எந்தவொரு நிபந்தனைகளும்,  நீண்ட கால உறுதிப்பாடுகளும் இல்லாத “அன்பு” நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது, அதாவது பணத்துக்கு பல்வேறு ரொமான்டிக் அனுபவங்கள் வழங்கப்படுகின்றன.

ரூ11க்கு கட்டிப்பிடித்தல் முதல்…

சீனாவின் ஷென்ஜென் போன்ற நகர தெருக்களில் விலைப்பட்டியலுடன் அமர்ந்து இருக்கும் இளம் பெண்கள், முத்தமிடுதல், கட்டிப்பிடித்தல், சேர்ந்து திரைப்படம் பார்த்தல் போன்ற சேவைகளை வழங்குகின்றனர்.

விலைப்பட்டியலின் முறையே, ரூ 11க்கு கட்டிப்பிடித்தல், ஒரு முத்தத்திற்கு ரூ.110, சேர்ந்து திரைப்படம் பார்ப்பதற்கு ரூ.150, ஒரு மணி நேரம் சேர்ந்து குடுப்பதற்கு ரூ.461, மற்றும் சேர்ந்து வீட்டு வேலை செய்வதற்கு ரூ.2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசமான போக்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தாலும், பல்வேறு வினாக்களையும், எதிர் கருத்துகளையும் எழுப்பியுள்ளது.

17 வயது சிறுவனால் பிரித்தானியாவில் வெடித்த கலவரம்!!

Quick Share

பிரித்தானியாவில் Southport கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து தாக்குதல்தாரி குறிப்பிட்ட சமூகத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நாடு முழுக்க கலவரம் வெடித்துள்ளது.

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்

பிரித்தானியாவின் லங்காஷயர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் Southport பகுதியில் சிறார்களுக்கான நடன வகுப்பில் நுழைந்து திடீரென்று சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளான்.

இதில் 11 சிறார்கள் உட்பட 13 பேர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் மூன்று சிறுமிகள் மரணமடைந்துள்ள சம்பவம், நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல்தாரி மாஸ்க் அணிந்தவர், தலை மூடப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளதால், அப்பகுதி மக்களுக்கே அவர் யார் என்பது அடையாளம் காண முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த நபர் பிரித்தானியாவில் பிறந்தவர் என்பது மட்டுமே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட காரணங்களுக்காக அந்த 17 வயது தாக்குதல்தாரி குறித்த தகவல்கள் எதையும் பொலிஸ் தரப்பு வெளியிட மறுத்துள்ளது.

இந்த நிலையில், குறித்த நபர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை Southport பகுதியில் அமைந்துள்ள மசூதி அருகே திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸ் வாகனங்களுக்கும் நெருப்பு வைத்தனர்.

Southport பகுதி போர்க்களமாக மாறிய நிலையில், கலவரம் பல பகுதிகளில் வியாபித்துள்ளது. தற்போது Hartlepool பகுதியில் கலவரம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவறான தகவல்களை பரப்பி 

இப்பகுதியிலும் மசூதி அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், முர்ரே தெரு தொடங்கி ஷெரிஃப் தெரு முதல் கிரேஞ்ச் சாலை வரையில் தற்போது மூடப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ணாடி போத்தல்கள் மற்றும் பீர் கேன்களையும் வீசியுள்ளனர். அத்துடன் எங்கள் பிள்ளைகளை வன்முறையில் இருந்து காப்பாற்றுங்கள் என முழக்கமிட்டபடியே பொலிசாருடனும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே, மான்செஸ்டரில் ஒரு ஆர்ப்பாட்டம் தொடங்கிவிட்டது என்று நம்பப்படுகிறது. Southport பகுதியில் மசூதி ஒன்று தாக்கப்பட்டதுடன், வெடித்த கலவரத்தில் சுமார் 50 பொலிசார் காயமடைந்துள்ளனர். 

EDL என்ற அமைப்பின் ஆதரவாளர்களே, கைதான 17 வயது தாக்குதல்தாரி தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருவதுடன், போராட்டங்களை நாடு முழுவதும் தூண்டுவதாக பொலிசார் நம்புகின்றனர்.

கைதாகியுள்ள அந்த 17 வயது நபர் லங்காஷயர் பகுதியில் வசித்து வந்தாலும், Cardiff நகரில் பிறந்துள்ளார். மேலும், சட்ட காரணங்களுக்காக அவர் பெயர் உள்ளிட்ட தரவுகள் எதையும் வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர். 

தற்போது அவர் மீது மூன்று கொலை வழக்கும் 10 கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டுள்ளதாக மெர்சிசைட் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

பூச்சிகளில் இது அதிகமா இருப்பதால்… 30 வகை பூச்சிகளை உண்ண அனுமதி கொடுத்த நாடு !

Quick Share

சிங்கப்பூரில் 16 வகையான பூச்சிகளை உணவில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிரிகெட்டுகள், வெட்டுக்கிளிகள், புழுக்கள், தேனீ வகை மற்றும் தானியத்தில் பரவும் பூச்சிகள் ஆகியவை இதில் அடங்கும்.

பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பூச்சிகள் ஏற்கனவே street food-ன் ஒரு பகுதியாகும். ஆனால் சிங்கப்பூரில், சுகாதாரம் மற்றும் சுகாதார காரணங்களுக்காக பூச்சிகளை சாப்பிட அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், தற்போது இங்கு உணவுக் கொள்கை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, 16 வகையான பூச்சிகளை உணவில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வுக்கு அனுப்பப்படும் பூச்சிகள் நிபுணர்களின் மேற்பார்வையில் மட்டுமே வளர்க்கப்படும் என சிங்கப்பூர் உணவு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இவை காட்டு சூழலில் இருந்து கொண்டு வரப்படாது. பராமரிப்பின் போது கெட்டுப்போன உணவை அவர்களுக்கு வழங்க முடியாது.

பூச்சி உணவுகள் மாதிரிகள் கொடுக்கப்படுகின்றன

Reuters செய்தி அறிக்கையின்படி, சிங்கப்பூரில் கடல் உணவுகளை விற்கும் ஒரு உணவகம் இந்த பூச்சிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. உணவகத்தில் பூச்சிகளுக்கு மீன் கறியுடன் இறால், டோஃபு போன்றவற்றை உணவாக அளித்து வருகின்றனர்.

இது தவிர, வறுத்த அரிசியில் பூச்சிகளின் மேல்புறமும் சேர்க்கப்பட்டுள்ளது. உணவகத்தின் மெனுவில் இதுபோன்ற 30 உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன, அதில் இந்த பூச்சிகள் வழங்கப்படும்.

உணவு ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின், இவை சாதாரண மக்களுக்கு வழங்கப்படும். தற்போது இது மாதிரியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு நிபுணர் பால் டெங் கூறுகையில், பெரும்பாலான பூச்சிகளில் புரதச் சத்து அதிகம் உள்ளது. இருப்பினும், மக்களின் அன்றாட உணவில் அவற்றைச் சேர்ப்பது பெரும் சவாலாக இருக்கும்.

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, சிங்கப்பூர் அதன் 90% உணவை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

2019-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் அரசாங்கம் 2030-ஆம் ஆண்டில் நாட்டில் 30% ஊட்டச்சத்துக்கள் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவித்தது.

115 கிலோவில் இருந்து 67 கிலோ..! பிரித்தானிய பெண்ணின் உடல் எடை குறைப்பு ரகசியம்

Quick Share

115 கிலோவிலிருந்து 67 கிலோவாக உடல் எடையை குறைத்த பிரித்தானிய இளம் பெண் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறார்.

உடல் எடை குறைப்பு

பிரித்தானியாவின் நார்த்தாம்டனில் 20 வயதான ஒரு சந்தைப்படுத்தல் நிர்வாகி (marketing executive) ஒருவர் தனது அபாரமான உடல் எடை குறைப்பால் சமூக ஊடகத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.

ஒரு காலத்தில் 115 கிலோ எடை கொண்ட மில்லி ஸ்லேட்டர்(Millie Slater) என்ற அந்த பெண்,  தற்போது 67 கிலோவாக தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

2023ம் ஆண்டு தனது உடல் ஆரோக்கிய முயற்சிகளை கையில் எடுத்த ஸ்லேட்டர், உடற்பயிற்சி மற்றும் சமமான உணவு முறைகள் மூலம் உடல் எடையை குறைத்துள்ளார்.

ஸ்லேட்டரின் இந்த அபார வெற்றிக்கு அவரது நடை பயிற்சி ஆர்வம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

பிரபலமான பிட்னஸ் செல்வாக்காளர் லாரன் கிரால்டோ (Lauren Giraldo) பிரபலப்படுத்திய 12-3-30 நடைப்பயிற்சியால் ஈர்க்கப்பட்ட ஸ்லேட்டர், தனது  இந்த பயிற்சியில் சாய்வுடன்(incline walking) கூடிய நடையை இணைத்து வெற்றி பெற்றுள்ளார்.

12-3-30 நடைப்பயிற்சி

பயோமெக்கானிக்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், தட்டையான தளத்தில் நடப்பதை விட 5% சாய்வுடன் நடப்பது 17% அதிக கலோரிகளையும், 10% சாய்வுடன் நடப்பது 32% அதிக கலோரிகளையும் எரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஹெல்த் சென்ட்ரலின் கூற்றுப்படி,  வெறும் 30 நிமிட 12-3-30 பயிற்சியில், 150 பவுண்டு எடையுள்ள ஒரு நபர் சுமார் 300 கலோரிகளை எரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




You cannot copy content of this Website