உலகம்

ரஷியாவில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்: என்ன காரணம்?..

Quick Share

ரஷியாவின் ஹபர்ஸ்வோக் மாகாண கவர்னராக செயல்பட்டு வருபவர் செர்ஜி ஃப்ர்ஜர். இவர் 2018 ஆம் ஆண்டு நடந்த மாகாண கவர்னர் தேர்தலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார். இதற்கிடையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தொழிலதிபர்கள் கொலைச்சம்பவங்களில் செர்ஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் கடந்த வாரம் அவரை கைது செய்தனர். இந்த கைது சம்பவம் அம்மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவர்னருக்கும், 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அதிபர் புதினின் ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடித்ததால் வேண்டுமென்றே செர்ஜி கைது செய்யப்பட்டதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், கவர்னர் செர்ஜி கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹபர்ஸ்வோக் மாகாண மக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராகவே இந்த போராட்டங்கள் பெரும்பாலும் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், போராட்டம் தொடர்ந்து 8-வது நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் ரஷியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையில், கவர்னர் செர்ஜி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் ஒரு வேளை நிரூபிக்கப்பட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களை முகக்கவசம் அணியுமாறு உத்தரவிடமாட்டேன்: டிரம்ப் திட்டவட்டம்!

Quick Share

உலகம் முழுவதும் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு கொரோனாவால் 37 லட்சத்து 70 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1 லட்சத்து 42 ஆயிரத்து 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் பொருளாதார பாதிப்பை சரிசெய்ய ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தும் முயற்சியிலும் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது.

அந்த வகையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் சில அமெரிக்க மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன. ஜனாதிபதி டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக இருக்கும் மாகாணங்களும் இதில் அடங்கும். மேலும் அமெரிக்க மத்திய அரசும் இந்த உத்தரவை நாடு முழுவதும் பிறப்பிக்க வேண்டும் என மாகாண ஆளுநர்கள் மூத்த சுகாதாரத்துறை நிபுணர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் முகக்கவசம் அணிவது தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்ப் மிகவும் கறாராக உள்ளார். முகக்கவசம் அணிவதால் நோய் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்து வருகிறார். மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவிய தொடங்கிய நாளில் இருந்து அவர் முகக்கவசம் அணியாமலேயே அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதற்கு எதிர் கட்சியினர் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் டிரம்ப் முகக்கவசம் அணியாமலேயே இருந்து வந்தார்.

இருப்பினும் சமீபத்தில் முதல் முறையாக முகக்கவசம் அணிந்த படி அவர் பொதுவெளியில் தோன்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதனிடையே நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசிய அமெரிக்காவின் உயர் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி பாசி, “பொதுமக்கள் முகக்கவசம் அணிய மத்திய மற்றும் மாகாண அரசுகள் கட்டாயப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. நாம் அனைவரும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்”என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க அமெரிக்க மக்களை முகக்கவசம் அணியுமாறு ஒருபோதும் உத்தரவிட மாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் போது டிரம்ப் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் “ கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமெரிக்க மக்களை முகக்கவசம் அணியுமாறு உத்தரவிட மாட்டேன். முகக்கவசம் அணிவது குறித்து தேசிய அளவில் ஆணை பிறப்பிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் இருக்க வேண்டும்” என கூறினார்.

கோவிட்-19: உலகளவில் 6 லட்சம் பேர் பலி – அதிரும் நாடுகள்!

Quick Share

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்து 125 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 52 லட்சத்து 6 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 910 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 86 லட்சத்து 11 ஆயிரத்து 236 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 4 ஆயிரத்து 819 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 885 பேரும், அமெரிக்காவில் 813 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 1,42,877

பிரேசில் – 78,817

இங்கிலாந்து – 45,273

மெக்சிகோ – 38,310

இத்தாலி – 35,042

பிரான்ஸ் – 30,152

ஸ்பெயின் – 28,420

இந்தியா – 26,273

அழுத்தம் கொடுக்கும் ட்ரம்ப்: அரசு மீது மக்கள் அதிருப்தி!

Quick Share

அமெரிக்காவில் புதிய கல்வி ஆண்டு நெருங்கிவரும் நிலையில் மாணவர்களை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்குத் திரும்புமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில், கொரோனா நெருக்கடி காரணமாக மாவட்டங்கள் வாரியாக பாடசாலைகள், கல்லூரிகள் வெவ்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றுகின்றன.

சில பாடசாலைகள் புதிய கல்வி ஆண்டு ஆரம்பிப்பதை பிற்போடுமாறு கோரிவருவதுடன் இன்னொரு பகுதியினர் சுகாதார வழிமுறைகளுடனான தனிமனித இடைவெளியைப் பின்பற்றி கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க ஆர்வம் காட்டியுள்ளனர். எனினும், புதிய கல்வி ஆண்டு தொடக்கத்தை பிற்போடுமாறு மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து உள்ள தீவிரத்தன்மை குறையாத நிலையில் இப்போது நாளுக்கு நாள் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது.

அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் அந்நாட்டில், 38 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதுடன் இதுவரை ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 500 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 வயது சிறுவனால் ஹேக் செய்யப்பட்ட உலகின் முக்கிய பிரபலங்களின் டுவிட்டர் கணக்கு …

Quick Share

கடந்த புதன் கிழமை 130க்கும் மேற்பட்ட பல்வேறு முக்கிய பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. பிரபலங்களின் கணக்கில் க்ரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் மோசடிப்பதிவுகள் பகிரப்பட்டன. இந்த கணக்குகள் மூலமாக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு, அந்த லிங்க் வழியாக அனுப்பப்படும் பணம், இரட்டிப்பாக திருப்பிக்கொடுக்கப்படும் என்றும் டுவீட் செய்யப்பட்டிருந்தது. ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மாஸ்க், ஜோ பீடன், மைக் ப்ளூம்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், பிளாய்ட் மெவேதர் மற்றும் கிம் காதர்சியான் ஆகியோரின் டுவிட்டர்கள் உட்பட உலகமெங்கும் பல பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளில் இந்த டுவீட்கள் வலம் வந்தன.

இதைதொடர்ந்து, டுவிட்டர் நிறுவனம் போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனாலும் இதன் மூலமாக பிட்காயின் வாலட்டில் குறைந்தது 300 பரிவர்த்தனைகள் வழியாக, ரூ.75 லட்சத்துக்கும் மேலான தொகை ஹேக்கர்களால் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த ஹேக்கிங் எப்படி நடந்தது என்பது பற்றி எப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.<இப்போது இந்த ஹேக்கிங் தாக்குதல் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சைபர் செக்யூரிட்டி குழு கண்டறிந்த தகவல்களின்படி ப்ளக்வாக்ஜோ என்ற ஹேக்கர் இந்த பெரிய ஹேக்கிங் தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஆவணங்கள் கிடைத்துள்ளன.

இந்த ஹேக்கர் ஏற்கனவே பல இணைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.ப்ளக்வாக்ஜோ என்னும் ஹேங்கர் 21 வயதுடைய ஜோசப் ஜேம்ச் கான்னர் என்பதும், இவர் லண்டன், லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் எனவும்,தற்போது ஸ்பெயினில் வசித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மாபெரும் ஹேக்கிங் பற்றிய முழு விபரங்களையும் திரட்டிவருகிறோம் என சைபர் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

ஈரானில் மற்றுமொரு வெடிவிபத்து: தொடரும் மர்மம்!

Quick Share

ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. இதையடுத்து அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத செறிவூட்டல் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக அந்நாட்டின் அணு ஆயுத செறிவூட்டல் மையம், பெட்ரோ கெமிக்கல், மையம், திரவ எரிபொருள் உற்பத்தி மையம், மின் உற்பத்தி மையம், மருத்துவமனை உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு பகுதிகளில் மர்மமான முறையில் வெடி விபத்துகளும், தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

அணு ஆயுத செறிவூட்டல் மையம், மின் உற்பத்தி மையம், வேதிப்பொருள் உற்பத்தி மையத்தில் அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகறது. இந்த விபத்துக்கான காரணங்கள் எவை என்பதை கண்டுபிடிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தங்கள் நாட்டின் அணு ஆயுத மையம், மின் உற்பத்தி அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்துவதாக ஈரான் அரசு குற்றச்சாட்டியுள்ளது.

அணு ஆயுத உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஈரான் குற்றச்சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்த மர்ம விபத்துக்களின் வரிசையில் மேலும் ஒரு வெடி விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் இஸ்பஹன் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று திடீரென மர்மமான முறையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து காரணமாக மின் உற்பத்தி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.

மேலும், நகரின் முக்கிய இடங்களில் சில மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. ஆனால் இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த சில நாட்களாக நடைபெறும் மர்ம விபத்துக்கள் வரிசையில் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த மர்ம விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஆனால் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற விபத்துக்கள்:

ஜூன் 26 – ஹோகிர் நகரில் உள்ள திரவ எரிபொருள் உற்பத்தி மையத்தில் வெடி விபத்து

ஜூன் 26 – ஷீரஸ் நகரில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் தீ விபத்து

ஜூன் 30 – மருத்துவமனையில் வெடி விபத்து – 19 பேர் பலி

ஜூலை 2 – நடன்ஸ் அணு ஆயுத செறிவூட்டல் மையத்தில் வெடி விபத்து

ஜூலை 3 – ஷீரஸ் நகரில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து

ஜூலை 4 – அல்வாஸ் நகரில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் வெடி விபத்து

ஜூலை 4 – மஸ்ஹர் நகரில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மையத்தில் வாயுக்கசிவு

ஜூலை 19 – இஸ்பஹன் மாகாண மின் உற்பத்தி மையத்தில் வெடி விபத்து

Covid-19 மருந்து கண்டு பிடிக்கும் முறையை திருடினோமா ? இந்த கதையை நங்கள் நம்ப முடியாது எ...

Quick Share

உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கான ஆராய்ச்சிகள் நடந்துவருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் நாட்டில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக பிரிட்டன் அரசு அறிவித்து இருந்தது.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துதான் முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது பிரிட்டன் அரசு ரஷியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி தொடர்பான அறிவுசார் தகவல்களை திருட முயற்சிப்பதாக குற்றச்சாட்டியது.

பிரிட்டன் அரசின் குற்றச்சாட்டு சர்வதே அளவில் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரிட்டன் நாட்டிற்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கெலின் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “ஹேக்கிங் குழுவை ரஷ்ய உளவுத்துறையுடன் இணைத்து உருவாக்கியுள்ள இந்த கதையை நான் நம்பவில்லை. இது அர்த்தமற்றது.

பிரிட்டன் – ரஷியா இடையே உள்ள உறவில் உள்ள பிரச்னைகளை தீர்க்கவும், சிறந்த உறவை ஏற்படுத்தவும் முயற்சிப்போம். இந்த குற்றசாட்டு அனைத்தையும் நாங்கள் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இது பற்றி மூன்று மாதங்களுக்கு முன்பே அதிபர் டிரம்பிற்கு தெரியும்.., வாயடைத்து போன அமெரி...

Quick Share

அமெரிக்க டிரம்ப் அரசு நிர்வாகத்தில் பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் பொறுப்பு தலைவராக 3 ஆண்டு பதவி வகித்து வந்த தோடாஸ் பிலிப்சனின். இவர் தலைமையிலான குழு பெரிய அளவில் சேதம் விளைவிக்கும் தொற்று குறித்து 41 பக்க அறிக்கை ஒன்றை கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தது.

இந்த தொற்று மூலம் 5 லட்சம் அமெரிக்கர்களை பலி வாங்க கூடிய பெருந்தொற்று நோய் பின்னாளில் ஏற்பட கூடிய ஆபத்து உள்ளதாகவும், அமெரிக்க பொருளாதாரத்தில் 3,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தோடாஸ் பிலிப்சனின் கடந்த ஜூன் மாதம் தனது பதவியில் இருந்து விலகி சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பணிக்கு மீண்டும் திரும்பினார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் கொரோனா பாதிப்புக்கு ஆளான இவர், கொரோனா வைரசை முன்பே கண்டறிவது சாத்தியமில்லாதது என்றும் தடுக்க முடியாது என்றும் டிரம்ப் கூறிவந்த நிலையில், பிலிப்சனின் முன்பே எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விஷயம் அதிபருக்கு கொரோனா பரவ மூன்று மாதங்கள் முன்பே தெரியும் என பகிரங்கமாக தொலைக்காட்சியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனுக்கு தனது ஆபாச படங்களை அனுப்பிய அமெரிக்கா அழகி, அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோ...

Quick Share

அமெரிக்காவில் 29 வயது அழகி ஒருவர் சிறுவனுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ramsey Carpenter-Bearse ரம்சே கார்பென்டர் பியர்ஸ் (29) என்னும் பெண் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா- கனாவா கவுண்டியில் இருக்கும் ஆண்ட்ரு ஜாக்சன் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கென்டக்கி யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்றுள்ளார்.

ரம்சே கார்பென்டர் பியர்ஸ் கடந்த 2014-ஆம் ஆண்டு மிஸ் கென்டக்கி பட்டம் வென்றவர். திருமணமான இவர் கடந்த Oct. 2018-ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பியது தெரியவந்தது பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட மாணவனின் போனை எடுத்து ஸ்நாப் சாட்-ல் பெற்றோர் எதிர்பாரதவிதமாக பார்த்த போது, அதில் ரம்சேயின் நான்கு மேல் ஆடை இல்லாத புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நடந்து வந்த விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். “எனது செயல்களுக்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக நான் வருந்துகிறேன்.

நான் இதற்கு முன்பு இதுபோன்று எதையும் செய்ததில்லை. மீண்டும் இது போன்று செய்ய மாட்டேன் என கதறி அழுதார்.

இந்த வழக்கின் காரணமாக மிகுந்த மனச்சோர்வு அடைந்துள்ளதாக என்று வேதனையுடன் கூறியுள்ளார். தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

COVID-19 கொசுக்கள் மூலம் பரவுமா ? இது மனிதர்களுக்கு பரவவும் ஆபத்து உள்ளதா ? ஆராச்சியாளர...

Quick Share

கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவுமா ? இது மனிதர்களுக்கு பரவவும் ஆபத்து உள்ளதா ? என்ற கேள்வி பரவலாக உள்ளது.

இது குறித்து ஒரு புதிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸை கொசுக்களால் மக்களுக்கு பரப்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்

சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், கோவிட் -19 நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 என்ற வைரஸின் திறன், கொசுக்களால் தொற்று பரவும் தன்மை பற்றிய முதல் சோதனை விசாரணையை நடத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) கொசுக்களால் வைரஸைப் பரப்ப முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள நிலையில், கோட்பாட்டை ஆதரிக்கும் உறுதியான ஆராய்ச்சி முடிவுகளை வழங்குவதில் எங்கள் ஆய்வு முக்கியமானது” என்று அமெரிக்காவின் கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹிக்ஸ் கூறினார்.

முடிவுகளுக்கு, பரவலாக இருக்கும் மூன்று கொசு இனங்கள் – ஏடிஸ் ஈஜிப்டி Aedes aegypti,, ஏடிஸ் அல்போபிக்டஸ் Aedes albopictus மற்றும் குலெக்ஸ் குயின்கெபாஸியாட்டஸ் Culex quinquefasciatus – மக்களை பாதிக்கும் இரண்டு மிக முக்கியமான ஆர்போவைரஸ் arbovirus vectors திசையன்களைக் குறிக்கும்.

மேலும், இந்த மூன்று உயிரினங்களும் கொரோனா வைரஸ் தோற்ற நாடான சீனாவில் உள்ளன.
மூன்று பொதுவான மற்றும் பரவலாக இருக்கும் கொசுக்களின் வகைகளில் மூலம் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவாது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தொடரும் இனவெறி தாக்குதல்: கனடாவில் தாக்குதலுக்கு உள்ளான இந்திய வம்சாவளியினர்!

Quick Share

இந்திய வம்சாவளியினர் மீது கனடாவில் இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வான்கூவர் நகரின் சம்மர்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு இந்திய வம்சாவளியினரின் வீடு, நள்ளிரவு நேரத்தில் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரமேஷ் லேகி மற்றும் கிரண் லேகி தம்பதியர் மட்டுமே, வீட்டில் இருந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் அவர்கள் வெளியே வரவில்லை. விடிந்து பார்த்தபோது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தன.

இன்னொரு அதிர்ச்சியாக, வீட்டுச் சுவர்களில் கெட்ட வார்த்தைகள், இனவெறியைக் குறிக்கும் ஓவியங்கள் மற்றும் ஆபாச படங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தை அறிந்த லேகி தம்பதியரின் மூன்று குழந்தைகளும், அதிகாலையிலேயே பெற்றோர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து விட்டார்கள். சுவரிலிருந்த ஓவியங்களைப் பார்த்த அவர்கள், இது இனவெறி கொண்ட நபர்களின் தாக்குதல் என்பதை உறுதி செய்து பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த பகுதியில் இனி வசிப்பதற்கே அச்சமாக இருக்கிறது என கூறியிருக்கிறார் லேகி தம்பதியின் மகள் விஷாலி. வயதானவர்கள் மட்டும் இருக்கும்போது இப்படி ஒரு அத்துமீறல் நிகழ்ந்திருக்கிறது என்றால், அவர்கள் மிகக் கொடுமையானவர்கள் என கூறியிருக்கிறார் அவர்களது இளைய மகனான அபிஷேக்.

இந்த தாக்குதலை அறிந்த சம்மர்லேண்ட் நகர மேயர் டோனி பூட், இது ஒரு குடும்பத்தின் மீதான தாக்குதல் அல்ல எனவும், இன ரீதியாக குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் விமர்சித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த மேயர், அவர்களுக்கு ஆறுதல் கூறி, நம்பிக்கை அளித்துள்ளார். இனவெறி தாக்குதலுக்கு எதிராக கனடா மக்கள் பலரும் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் தேவாலயத்திற்கு முன்பு மர்ம நபர்கள் வெறிச்செயல்!

Quick Share

அமெரிக்காவில் தேவாலயத்திற்கு வெளியில் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் தலை துண்டாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் West Kendall-ல் இருக்கும் Good Shepherd தேவலாயத்திலே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுவதால், Miami-Dade பொலிசார் மற்றும் பாதுகாப்பு துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Miami மறைமாவட்டத்தின் செய்தித் தொடர்பாளர் Mary Ross Agosta கூறுகையில் இது தேவாலயத்தின் மீதான தாக்குதல், இது தனியார் சொத்து மட்டுமல்ல, இது புனிதமான சொத்து என்று கூறியுள்ளார். தேவாலய ஊழியர்கள் சம்பவ தினத்தன்று காலை 8 மணிக்கு முன்னதாக சிலையை அதன் தலையுடன் கிடப்பதைக் கண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் தேவாலயத்தில் பாதுகாப்பு காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல ஆங்கில ஊடகமான பாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த சம்பவம் திருச்சபை சமூகத்தை வருத்தப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கமெராவிலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து சரியாக பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது.




You cannot copy content of this Website