உலகம்

தீவிர பரவலை எட்டிய கொரோனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Quick Share

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தொற்று 1½ கோடி பேருக்கும் மேலாக பாதித்து இருப்பதாகவும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தில் பதிவாகி இருக்கிறது. எல்லா நாடுகளும் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஒப்பீட்டளவில் சில நாடுகளில் தீவிரமான பரவலை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம்.

உலகளவில் கொரோனா பாதித்த 1 கோடி பேர் அல்லது மொத்த பாதிப்பில் மூன்றில் இரு பங்கினர் 10 நாடுகளை சேர்ந்தவர்கள். மொத்த பாதிப்பில் பாதிப்பேர் வெறும் 3 நாடுகளை சேர்ந்தவர்கள்தான். நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்கள், சமூக ஈடுபாடு உள்ளவர்கள் இரு முக்கிய தூண்களாக இருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசைப் பொறுத்தமட்டில் பயன்படுத்த வேண்டிய கருவிகளில் ஒன்று சட்டம். இது கட்டாயப்படுத்துவது அல்ல. பொது ஆரோக்கியத்தையும், மனித உரிமைகளை யும் பாதுகாப்பது ஆகும்.

உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மேம்பாட்டு திட்டம் மற்றும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் தொற்று சட்ட தரவுத்தளம் ஒன்றை தொடங்கி உள்ளோம். இது தொற்று நோய்க்கு எதிராக நாடுகள் அமல்படுத்தியுள்ள சட்டங்களின் தரவுத்தளம் ஆகும். அவசர கால அறிவிப்புகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், நோய் கண்காணிப்பு, முக கவசம் அணிவதையொட்டிய சட்ட நடவடிக்கைகள், தனிமனித இடைவெளியை பராமரித்தல், மருந்து மற்றும் தடுப்பூசிகளை அடைதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

நன்றாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்க உதவும். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை மதிப்பீடு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டியது உள்ளது. பாதுகாப்பான பொது இடங்களை, பணித்தளங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இருந்தாலும், மோசமாக வடிவமைக்கப்பட்டு, அமல்படுத்தப்படுகிற சட்டங்கள் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக் கின்றன. பாகுப்பாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தடுக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும், உயிர்களைக் காப்பதற்கும் சிறப்பான வழி உண்டு. தனி நபர்களும், சமூகத்தினரும் தங்கள் சொந்த ஆபத்தை நிர்வகிப்பதற்கும், அவர்களின் சொந்த ஆரோக்கியத்தையும், அவர்களைச்சுற்றிலும் இருப்பவர்களை பாதுகாப்பதற்கான ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட முடிவுகளை எடுப்பதாகும்.

கொரோனா தொற்று நோய் பல கோடி மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. ஏராளமானோர் மாதக்கணக்கில் வீடுகளில் அடைபட்டுள்ளனர். மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடர விரும்புகிறார்கள் என்பது முழுமையாக புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் நாம் பழைய இயல்பு நிலைக்கு திரும்பிவிட முடியாது. ஏற்கனவே தொற்றுநோய் நமது வாழ்க்கையை மாற்றிப்போட்டிருக்கிறது. புதிய இயல்புக்கு மாறுவது, நமது வாழ்க்கையை பாதுகாப்பாக வாழ்வதற்கான வழியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவ பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார் இளவரசர் பிலிப்!

Quick Share

இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99), எடின்பரோ கோமகன் என்று அழைக்கப்பட்டு வந்தார். அந்த அடிப்படையில் அவர் 67 ஆண்டு காலமாக இங்கிலாந்து ராணுவத்தின் மிகப்பெரிய காலாட்படையான ரைபிள் படையின் தலைமை கர்னல் என்ற ராணுவ பொறுப்பை வகித்தார். கடந்த 2017-ம் ஆண்டு வயோதிகத்தின் காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விண்ட்சர் கோட்டையில் நடந்த ராணுவ விழாவில் அவர் ராணுவ பொறுப்பில் இருந்தும் முறைப்படி விலகினார். அந்த பொறுப்பை அவர் தனது மருமகளும், இளவரசர் சார்லஸ்சின் மனைவியுமான கமிலாவிடம் ஒப்படைத்தார். கமிலா, கார்ன்வால் கோமகள் என்று அழைக்கப்படுகிறார். இந்த விழா, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமனித இடைவெளியை பின்பற்ற ஏற்ற வகையில் எளிமையாக நடைபெற்றது. விழாவில் இளவரசர் பிலிப் பேசும்போது, தான் 67 ஆண்டு காலம் ராணுவ பொறுப்பு வகித்து சேவையாற்ற வழங்கிய வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகளுடன் கரை ஒதுங்கும் வடகொரிய படகு!

Quick Share

ஆள் ஆதரவற்ற நூற்றுக்கணக்கான வடகொரிய படகுகள் எலும்புக்கூடுகளுடன் தங்கள் கடற்பகுதியில் கரை ஒதுங்கும் நிலையில் சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஜப்பான். கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600 ஆதரவற்ற படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, கடந்த ஆண்டில் மட்டும் 150 படகுகள் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன. கடந்த 2019 டிசம்பரில் ஜப்பானின் சாடோ தீவுக்கு அருகே மரத்தினாலான படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரின் தலைகளும் எலும்புக்கூடாக உருமாறி வரும் ஐவரின் சடலங்களும் ஜப்பான் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் தற்போது சர்வதேச செய்தி ஊடகங்கள் சில தீவிர விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 50 வடகொரியர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக ஜப்பானின் கடலோர பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. வடகொரிய கடலில் சட்டவிரோதமாக மீன் பிடிக்க சீனா ஆயுத பலத்துடன் கூடிய தொழில்துறை கப்பல்களை முன்னர் அனுப்பியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் நம்பிக்கையற்ற வட கொரிய மீனவர்கள் பாதுகாப்பற்ற படகுகளில் அதிக தொலைவு கடலுக்குச் செல்வதன் மூலம் தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். மேலும் கடலின் உக்கிரம் தாங்க முடியாமல் பல வடகொரிய மீனவர்கள் கரை திரும்பாமல் போனதாகவும் கூறப்படுகிறது. ஒரு பக்கம் சீனாவின் ஆதிக்கத்தை கண்டு கொள்ளாத கிம் அரசு, மறுபக்கம் உணவு தட்டுப்பாட்டை சமாளிக்க மீனவர்களை கடலுக்குச் செல்ல கட்டாயப்படுத்தியும் வருகிறது.

இதே வேளை, கடந்த 7 ஆண்டுகளில், கடல் அலைகளில் சிக்கி, படகு கவிழ்ந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுமார் 50 வடகொரிய மீனவர்களை மீட்ட ஜப்பானிய கடற்படை அதிகாரிகள் முன்வைத்த முக்கிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்ததாகவே கூறப்படுகிறது. சீனாவின் ஆதரவுடன் வடகொரிய கடற்பகுதிகளில் மீன் பிடிக்க களமிறங்கும் தொழில்முறை படகுகள் ஒருபோதும் கடலில் தங்கள் இருப்பிடத்தை பகிரங்கப்படுத்துவதில்லை என பிரித்தானிய பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் வடகொரிய கடற்பகுதியில் 2017 ஆம் ஆண்டில் 900 க்கும் மேற்பட்ட சீனக் கப்பல்கள் சட்டவிரோதமாக மீன் பிடித்துள்ளன, 2018 இல் 700 கப்பல்கள். வட கொரியா கடற்பகுதிகளில் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கும் ஐ.நா. மன்றத்தின் பொருளாதாரத் தடைகளை சீனா மீறியிருக்கலாம் என்றே முக்கிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பிரேசிலை வாட்டி எடுக்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 84,207 ஆக உயர்வு!

Quick Share

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டிய போது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரத்து 482 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 95 லட்சத்து 34 ஆயிரத்து 899 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 1,47,333

பிரேசில் – 84,207

இங்கிலாந்து – 45,554

மெக்சிகோ – 41,190

இத்தாலி – 35,092

பிரான்ஸ் – 30,182

இந்தியா – 29,861

உலகிற்கு உதவிய கொரோனா: ஆய்வில் வெளியான உண்மை!

Quick Share

கொரோனா ஊரடங்கால் உலகெங்கிலும் நில அதிர்வு சத்தத்தில் 50% குறைப்புக்கு வழிவகுத்தது என ஆய்வவில் கண்டறியப்பட்டுள்ளது. புதிய ஆராய்ச்சியின் படி, கொரோனா பரவலை எதிர்த்து போராட விதிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உலகெங்கிலும் காணப்பட்ட நில அதிர்வு சத்தத்தில் 50% குறைப்புக்கு வழிவகுத்தன. சுற்றி நடப்பது மற்றும் கார் போக்குவரத்து போன்ற மனித நடவடிக்கைகள் ஒரு நில அதிர்வு சலசலப்பை ஏற்படுத்துகின்றன.

பெல்ஜியத்தின் ராயல் ஆய்வகம் தலைமையிலான இந்த ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். உலகெங்கிலும் உள்ள 300-க்கும் மேற்பட்ட நில அதிர்வு நிலையங்களின் தரவை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர். ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவரான பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விஞ்ஞானிகள் சீனா, இத்தாலி மற்றும் பின்னர் உலகின் பிற பகுதிகளிலும் பயணித்த படி ஊரடங்கு ‘அலை’ யைக் காட்சிப்படுத்த முடிந்தது என்று கூறினார். சுற்றுலாத்துறை குறைந்து வருவதாலும், பயண மற்றும் பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கையினாலும் இந்த குறைப்பு ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஜெர்மனியில் மோப்ப நாய்கள் கொரோனாவை கண்டுபிடிக்கும் அதிசயம்.., புது யுக்தி வெற்றி !!

Quick Share

கொரோனா சோதனையை அதிக படுத்த பல்வேறு நாடுகள் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் ராணுவ மோப்ப நாய்களை வைத்து கொரோனவை கண்டறிய நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில் ஜெர்மனியின் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி ஜெர்மனி ராணுவத்தில் உள்ள எட்டு மோப்ப நாய்களுக்கும் ஒரு வாரம் மட்டுமே, கொரோனா தொற்றுள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்று அல்லாதவர்களிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளைக் கண்டுபிடிக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ராணுவ மோப்ப நாய்கள் நேர்த்தியாக கொரோனா தொற்றுள்ள மாதிரிகளை கண்டுபிடித்ததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இப்படி ஆயிரம் மாதிரிகளைக் கொண்டு பரிசோதனை செய்ததில் சிறப்பாக செயல்பட்டு சரியாக கண்டுபிடித்தது.

இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என மோப்ப ராணுவ மோப்ப நாய்களை கொண்டு கொரோனா தொற்றுள்ளவர்களை அடையாளம் காணலாம் என்று இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. எனினும் இந்த ஆய்வு இன்னும் தொடக்க கட்டத்தில் மிக விரைவில் முழு வீச்சில் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிராக ஆபத்தான ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தான் சீனா ரகசிய ஒப்பந்தம்..

Quick Share

சீனா உலக நாடுகளுக்கு கொடுக்கும் பிரச்சினைகளை சமாளிக்க அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் இதில் ஒன்று சேர்ந்து உள்ளன.

சீனாவிற்கு எதிராக இந்த 8 நாடுகளின் அரசியல்வாதிகள் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள்.அதன்படி முதலாவதாக உலக நாடுகளின் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவது. சீனாவின் நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களை வாங்குவது, மோனோபோலி என்று சீனாவின் நிறுவனங்கள் தனித்து இயக்குவது ஆகியவற்றை எதிர்க்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சீனா எல்லை விவகாரத்தில் இந்தியாவுடன் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. சீனா தென் சீன கடல் எல்லை, தைவான் ஆகிய நாடுகள் மீது அத்துமீறி வருகிறது. இதை மொத்தமாக தடுக்க வேண்டும். சீனாவின் ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஹாங்காங் பிரச்சினையில் சீனாவின் செயலை தடுக்க வேண்டும். ஹாங்காங்கை சீனா மொத்தமாக கட்டுப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.சீனா இதை உள்நாட்டு விவகாரம் என்று கூறி வருகிறது. ஆனால் சீனா ஹாங்காங்கிற்கு கொடுத்த வாக்கை மீறி விட்டது.

இதனால் ஹாங்காங்கில் அமைதியை கொண்டு வரும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது. எல்லையில் ஏற்கெனவே கடை பிடிக்கப்பட்டு வரும் நிலையை தனிச்சையாக மாற்றும் முயற்சியை எதிர்ப்பதாக ஜப்பான் கூறியுள்ளது.

தற்போது சீனாவுக்கு எதிராக, இந்தியாவுடன் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஜப்பான் தயாராகியுள்ளது.
பாதுகாப்பு உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள, ஜப்பான் தனது சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்துள்ளது. இந்தத் திருத்தத்துடன், ஜப்பான், அமெரிக்காவைத் தவிர, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துடனும் தன் பாதுகாப்பு உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்கிறது.

கொரோனா வைரஸ் தோன்றியதில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி சீனாவை தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

அமெரிக்காவின் அறிவுசார் வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சாட்டியுள்ளது. இதனால் அமெரிக்க – சீனா மோதல் உச்சகட்டத்தை எட்டுகிறது

சீனா தற்போது தனக்கு ஆதரவான ரஷியா, தென் கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நட்பாக இருக்கிறது.

கொரோனா நோய் தோன்றிய சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால்மற்ற நாடுகளை கொரோனா ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா நெருக்கடியில் பாகிஸ்தானுக்கு சீனா மறைமுகமாக உதவி வருகிறது. இதனால் உலகத்திற்கு எதிராக சீனா ஏற்கனவே உயிரியல் போரை தொடங்கி விட்டதாகவே நிபுணர்கள் கருதுகிறார்கள்

தற்போது இந்தியா மற்றும் மேற்கு போட்டியாளர்களுக்கு எதிரான தாக்குதலுக்காக பாகிஸ்தானும் சீனாவும் ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை ( bio-warfare) விரிவுபடுத்துவதற்கான இரகசிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன,

இதில் ஆபத்தான ஆந்த்ராக்ஸ் தொடர்பான பல ஆராய்ச்சி திட்டங்கள் அடங்கும் என தி கிளாக்சன் செய்தி நிறுவனம் பல உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டு உள்ளது.

உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியிலிருந்து கொரோனா நோய் தோன்றியிருக்கலாம் என்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாண்ட விதம் குறித்து சீனா விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் உயிரியல் போரின் அச்சுறுத்தல் கணிசமாக வளர்ந்துள்ளது, டி.என்.ஏ ஆராய்ச்சியில் சீனா பெரிதும் ஈடுபட்டுள்ளது, இது ஒரு உயிரியல் ஆயுதத்தை குறிவைக்க அல்லது குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக இருக்கக்கூடும் என கவலைகொள்ள செய்து உள்ளது.

தி கிளாக்சனில் (The Klaxon) அந்தோனி கிளான் (Anthony Klan) எழுதிய அறிக்கையின்படி, உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகம் பாகிஸ்தான் இராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு (டெஸ்டோ) உடன் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. வளர்ந்து வரும் தொற்று நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு ஒத்துழைக்க மற்றும் பரவும் நோய்களின் உயிரியல் கட்டுப்பாடு குறித்த முன்கூட்டிய ஆய்வுகளுக்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

டெஸ்டோ ஒரு இரகசிய உயிரியல் ஆயுத திட்டத்தின் கீழ் ஆந்த்ராக்ஸ் தொடர்பான பல்வேறு இரட்டை பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

உகான் ஆய்வகம் பாகிஸ்தானுக்கு உதிரிபாகங்களை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் தனது சொந்த வைரஸ் சேகரிப்பு தரவுத்தளத்தை உருவாக்க உதவுவதற்காக பாகிஸ்தானிய விஞ்ஞானிகளுக்கு நோய்க்கிருமிகள் மற்றும் உயிர் தகவல்தொடர்புகளை கையாள்வது பற்றிய விரிவான பயிற்சியையும் அளித்துள்ளது.

உளவுத்துறை ஆதாரத்தின்படி, இந்த பயிற்சி பாகிஸ்தானுக்கு வைரஸ்களின் மரபணு அடையாளம் காணல், ஆபத்தான நுண்ணுயிரிகளுக்கான அணுகல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் தொற்று நோய்களுக்கான மரபணு கருவிகளைப் பயன்படுத்துவதற்கான திறனை மேம்படுத்த” உதவும்.

இந்த ரகசிய திட்டம் பாகிஸ்தானில் உள்ள சிவில் பல்கலைக்கழகங்கள் அல்லது அரசாங்க சுகாதாரத் துறைகளின் மேற்பார்வையிலிருந்து பிரிக்கபட்டு உள்ளது.

“இரகசிய சீனா-பாக்கிஸ்தான் திட்டம் பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் பிரிக்க வெற்றிகரமான மண் மாதிரி சோதனைகளை “நடத்தியுள்ளது, இது பேசிலஸ் ஆந்த்ராசிஸ் அல்லது ஆந்த்ராக்ஸுடன்” குறிப்பிடத்தக்க ஒற்றுமையை “கொண்டுள்ளது.”

(பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் என்பது ஒரு கிராம்-நேர்மறை, மண்ணில் வசிக்கும் பாக்டீரியம் ஆகும், இது பொதுவாக உயிரியல் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது)

இந்த திட்டத்தில் சீனாவின் ஈடுபாட்டை பார்க்கும் போது இந்தியா மற்றும் முக்கிய மேற்கத்திய உளவு அமைப்புகள் “இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை ஈடுபடுத்துவதற்கான சீனாவின் முக்கிய திட்டமாக இருக்கலாம் என்று ஒரு பாதுகாப்பு நிபுணர் தி கிளாக்சனிடம் பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் சீனாவின் ஆர்வம் முக்கியமாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை ஈடுபடுத்துவதற்கும், வெளிநாட்டு மண்ணில் ஆபத்தான சோதனைகளை நடத்துவதற்கும், சீனாவின் நிலத்தையும் அதன் மக்களையும் ஆபத்துக்கு உட்படுத்தாமல் பாகிஸ்தான் மண்ணில் சோதனை நடத்த உந்தப்படுகிறது

சீனா அபாயகரமான உயிரி வேதியியல் ஆராய்ச்சிக்கான ஒரு இடமாக பாகிஸ்தானை தேர்ந்து எடுத்தது நடவடிக்கையின் ஒரு பகுதியாகும், அதே சமயம் “இதுபோன்ற செயல்களுக்கு தனது சொந்த நிலப்பகுதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறது.

சீனா-பாகிஸ்தான் உயிரியல் திட்டம் ஏற்கனவே கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் வைரஸ் (சி.சி.எச்.எஃப்.வி) மீது சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரி பாதுகாப்பு நிலை -4 நோய்களைக் கையாள வசதியற்ற ஆய்வகங்களில் ரத்தக்கசிவு காய்ச்சல் குறித்து பாகிஸ்தான் சோதனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி சீனாவின் தெற்கு யுன்னான் மாகாணத்தில் குன்மிங்கில் மருத்துவ உயிரியல் நிறுவனத்தையும் நிறுவியுள்ளது என்ற கவலைகள் உள்ளன என அதில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா, எங்க வீசியதில் அதிகம் தலையிடுகிறீர்கள் என எச்சரிக்...

Quick Share

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை அமெரிக்கா சமீபத்தில் மூட உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக தங்களது சீனாவில் செங்டு நகரில் உள்ள அமெரிக்கா துணை தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர், டெக்சாசில் உள்ள மருத்துவம் உள்ளிட்ட ஆராய்ச்சி முடிவுகளை திருட சீன உளவாளிகள் முயற்சி செய்வதாக கூறி, ஹூஸ்டனில் இயங்கி வரும் சீன துாதரகத்தை மூட, அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திரும்ப பெறாவிட்டால், பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. ஹாங்காங் வீசியதில் அமெரிக்கா சீனாவிற்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துவருகிறது. ஹாங்காங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்தியது, ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் மற்றும் தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்த நினைப்பது ஆகியவற்றால், சீனா மீது அமெரிக்கா கொந்தளித்துள்ளது.

தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவின் அநீதியற்ற நடவடிக்கைக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சீனா – அமெரிக்கா இடையில் நிலவும் சூழ்நிலையை நாங்கள் விரும்பியதில்லை. அனைத்திற்கும் அமெரிக்கா தான் காரணம். இரு தரப்பு உறவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

27 வயதில் எதிர்பாராமல் நடந்த சோகம்.., நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மது குடித்த பெண் திடீர்...

Quick Share

பிரிட்டன் நாட்டில் பிரைட்டன் என்னும் மாகாணத்தை சேர்ந்தவர் அலைஸ் புர்ட்டன் ப்ராஃபோர்டு. 27 வயதான இவர் கடந்த மாதம் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்தார்.

இவருடைய மரணம் குறித்து போலீஸ் விசாரித்தபோது. இறப்பதற்கு முன் இவர் வெறும் வயிற்றில் மது அருந்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக அவர் சிக்கலான ஆல்கஹால் கெட்டோ அசிடோசிஸால் மிகவும் அலைஸ் அவதிப்பட்டார்.

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கக் கூடிய அலைஸ் புர்ட்டன் ப்ராஃபோர்டு, யாருமே எதிர்பார்க்காத நிலையில், உயிரிழந்துள்ளார். அவரது ஊரில் உள்ள சைக்ளிங், ரன்னிங் கிளப்பில் தினமும் பயிற்சி மேற்கொள்பவர் அலைஸ் புர்ட்டன் ப்ராஃபோர்டுக்கு இப்படி ஒரு முடிவு வந்தது மோசமானது என அவரது நெருங்கிய வட்டாரம் நண்பர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

காதலன் கண்முன் காதலிக்கு நேர்ந்த கதி: கதறி அழும் காதலன்!

Quick Share

கனடாவில் பனிப்பாறை ஒன்றைக்காண்பதற்காக சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தார்கள், பலர் படுகாயமடைந்தார்கள். இந்த விபத்தில் தன் காதலியை பறிகொடுத்த Devon Ernest (23), அந்த பேருந்தில் சீட் பெல்ட் மட்டும் இருந்திருந்தால் தன் காதலி உயிரிழந்திருக்கமாட்டாள் என்கிறார். தன் காதலி Dionne Jocelyn Durocher (24)உடன் North Battlefordஇல் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்ந்திருக்கிறார் Ernest.

மலைகளை பார்த்தே இராத தன் காதலியையும், தன் சகோதரி ஒருவரையும் அழைத்துக்கொண்டு, தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஆல்பர்ட்டா புறப்பட்டபோதுதான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு சரிவில் செல்லும்போது, திடீரென பேருந்தின் முன் பக்க சக்கரங்கள் தேயும் சத்தத்தைக் கேட்டதாக கூறுகிறார் Ernest. இத்தனைக்கும் மலைப்பாதையில் செல்வதற்கேற்ற வகையில் பிரமாண்ட சக்கரங்கள் கொண்ட பேருந்து அது.

அடுத்து, தூக்கி வீசப்பட்டு, தலை பேருந்தில் மேல் பகுதியில் மோதி நினைவிழந்து, பின் நினைவு வந்தபோது தன் அருகே தன் காதலி Dionne கிடப்பதைப் பார்த்திருக்கிறார் Ernest. அவருக்கு லேசாக மூச்சு வருவதைப் பார்த்ததும், தன் சகோதரியை தேடிச் செல்ல, அவர் பத்திரமாக இருப்பதை உறுதி செய்துகொண்டபின், மீண்டும் தன் காதலியைக் காணவந்த Ernestக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஆம், Dionne இறந்து கிடந்திருக்கிறார்.

நாடித்துடிப்பையும் மூச்சையும் பரிசோதித்து, அவருக்கு உயிரில்லை என்பது தெரிந்ததும், அவரது தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு அரை மணி நேரம் கதறியிருக்கிறார் Ernest. அந்த பேருந்தில் சீட் பெல்ட் மட்டும் இருந்திருந்தால், தன் காதலி உயிரிழந்திருக்கமாட்டார் என்று கூறும் Ernest, எனக்கு என் காதலி வேண்டும் என கதறுவதைப் பார்த்தால் கல் மனமும் கரைந்துபோகும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட முயற்சித்தால் நசுக்கிவிடுவேன்: சீனா, ரஷ்யாவை கடுமையா...

Quick Share

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற சில அந்நிய நாடுகளின் தலையீடு இருப்பதாக ஜனநாயககட்சி வேட்பாளர் ஜோ பிடென் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப்பின் வெற்றிக்கு ரஷ்யா உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு துறையும் விசாரணை நடத்தியது. இந்த குற்றச்சாட்டை டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் மறுத்தனர். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் திகதி நடக்க உள்ளது.

இதில், டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். இவர் நிகழ்ச்சி ஒன்றில், 2016-ல் பார்த்த அதே சம்பவம் மீண்டும் அரங்கேறுகிறது. இம்முறை ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் பிற அந்நிய நாடுகள் நமது ஜனநாயகத்திலும், நமது தேர்தல் நடைமுறைகளிலும் தலையிடுவதற்காக ஆயத்தமாகி வருகின்றன. இதுதொடர்பாக நம்பத்தகுந்த உளவு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அவர்கள் தேர்தலில் தலையிட விடாமல் தடுப்பதற்கான சிறந்த வழி, எந்த நாடு தலையிட முயற்சிக்கிறது என்பதை வெளிஉலகுக்கு அம்பலப்படுத்த வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் டிரம்ப் நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டது. நான் அடுத்த அதிபரானால், நமது தேர்தல் நடைமுறையில் தலையிடும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன். எனது முழு அதிகாரத்தை பயன்படுத்தி பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதிப்பேன். தலையிட்ட நாடுகள் அதற்காக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

2 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பெண்: குவியும் பாராட்டுக்கள்!

Quick Share

ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற இரண்டு தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய பதின் வயது பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறார். தமது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, தமது குடும்பத்தின் ஏகே 47 துப்பாக்கியை கையில் ஏந்திய இந்தப் பெண், இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்ததாக கோர் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணின் தந்தை அரசாங்க ஆதரவாளர் என்பதால், தீவிரவாதிகள் அவர்கள் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. துப்பாக்கி ஏந்தியபடி இருக்கும் அந்தப் பெண்ணின் புகைப்படம் மிகவும் வைரலானது. இந்த சம்பவத்துக்குப் பிறகு க்ரிவா கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டைத் தாக்க மேலும் அதிக தீவிரவாதிகள் வந்துள்ளனர்.

ஆனால், அக்கிராம மக்களும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும் அவர்களை அடித்து விரட்டியதாகத் தெரிகிறது. தாலிபன்களை சுட்ட அந்தப் பெண்ணுக்கு 14ல் இருந்து 16 வயதுக்குள் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், அவரும், அவரது தம்பியும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.




You cannot copy content of this Website